Thursday, September 17, 2009

சென்னையில் நேபாள் கருத்தரங்கம் அனைவரும் வருக.



அரங்கக் கூட்டம்

செப்டம்பர் – 19 சனிக்கிழமை – மாலை 5 மணி

இடம்: தென்னிந்திய நடிகர் சங்கம்,
அபிபுல்லா ரோடு,
வள்ளுவர் கோட்டம் அருகில், தி.நகர்

தலைமை:

தோழர் அ. முகுந்தன்,
தலைவர் - பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு

சிறப்புரை:

தோழர் பசந்தா
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்,
நேபாள ஐக்கியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

மாபெரும் மக்கள் எழுச்சியின் மூலம் மன்னராட்சியை அகற்றிய நேபாள மாவோயிஸ்ட் கட்சி தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர் ஆட்சியிலிருந்து விலகியது ஏன்?

புதிய அரசமைப்புச் சட்டம் இயற்றப்படுவதற்கான தடைகள் என்ன?

கூட்ட ஏற்பாடு:


இந்திய – நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்

தொடர்புக்கு:

அ.முகுந்தன்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
110, 2வது மாடி, மாநகராட்சி வணிக வளாகம்,
63, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம்,
சென்னை-24
தொலைபேசி: 94448 34519

புதிய கலாச்சாரம் – 99411 75876

வினவு – 97100 82506

Wednesday, February 4, 2009

இந்திய அரசே ஈழத்தில் தலையிடாதே!! CPM பாசிஸ்டே கோயபல்ஸ்தனத்தை நிறுத்து!!

ஈழத்தில் தமிழர்களை ஒழிக்க நேரடியாக தனது ராணுவத்தினரை இந்தியா அனுப்பியுள்ளது சமீபத்திய சம்பவங்களில் அம்பலமானது. இந்திய அதிகாரிகள் காயமடைந்தது, செத்து ஒழிந்தது உள்ளிட்ட செய்திகள் மற்றும் அணை கட்டு உடைந்த சம்பவத்தில் கணிசமான அளவு இந்திய ராணுவத்தினர் செத்து சின்னா பின்னமானது போன்ற செய்திகள் மற்றும் இது போன்ற தொடர் செய்திகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.விசயம் இப்படியிருக்கு CPM பாசிஸ்டுகளின் இணைய பிரசங்கி சந்திப்பு தனது தளத்தில் படு கேவலமான கருத்தை இட்டுள்ளார்:""இந்திய அரசு வல்லாதிக்க மனப்பான்மையுடன் செயல்படுவதாக குற்றம் சுமத்துவது இலங்கையின் சுதந்திரத்தையும் - மக்களையும் கொச்சைப்படுத்துவதாகவே முடியும். எனவே தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் மிக அதிகமான அளவில் வெறியூட்டக்கூடிய முறையில் மிகைப்படுத்தப்படுவதும் நடைபெறுகிறது. """ (நன்றி: ஏகலைவன்)ஈழத்தில் சிங்கள இன வெறி அரசு மக்களை கொன்று குவித்து வருவது குறித்து பல்வேறு சர்வதேச நிறுவனங்களும், நார்வோ போன்ற நாடுகளும் கூட சமீபத்தில் தமது கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில் இந்த இணைய கோயபல்ஸ் CPM சந்திப்பு வாய் கூசாமல் பேசுகிறார். கேட்டால் இலங்கையின் இறையாண்மை போய்விடுமாம். போடாங்.....அப்படிப்பாத்தா குஜாராத் கலவரம் பற்றி பேசினால் குஜராத்தின் இறையாண்மை போய்விடும். இதே போல பாலஸ்தீனம், ஈராக் என்று எல்லா இறையாண்மைகளை பற்றியும் CPM தனது வாய், ஆசன வாய் உள்ளிட்டவற்றை மூடிக் கொண்டால் நமது வேலையாவது மிச்சமாகும்.மிகைப்படுத்தப்பட்ட செய்தியாம். எது 150 டாங்கிகள் சென்றதா அல்லது இந்தியா அங்கு நேரடியாக தனது ராணுவத்தினரையும், ஆயுதங்களையும், ராணுவ அதிகாரிகளையும் அனுப்பி யுத்தம் செய்து வருவதா? அல்லது இதோ இன்று 48 மணி நேர கெடு என்ற பெயரில் ஒட்டு மொத்தமாக மிச்ச மீதியுள்ள தமிழர்களையும் கொன்றொழிக்கும் வெறியுடன் எறிகணைகளை பொழிந்து வருவதா? எது மிகைப்படுத்தப்பட்ட செய்தி. மிகைப்படுத்தப்பட்ட விசயம் என்று ஒன்று இருந்தால் அது இனிமேலும் உங்களை போலி கம்யுனிஸ்டு என்று அழைப்பதுதான். ஏனேனில் போலியாக கூட இருக்கும் அடிப்படையின்றி பாசிஸ்டின் குரலில் அப்பட்டமாக, வெட்கமின்றி பேசும் ஒருவனை, கட்சியை போலி கம்யுனிஸ்டு என்று அழைப்பதுதான் மிகைப்படுத்தப்பட்டது.இந்த கும்பல் இப்படி பேசுவது ஒன்றும் ஆச்சர்யமான விசயமல்ல. ஈழத்தின் அவலத்தை எதிர்த்து ஒரு கிளர்ச்சி நிலையை உருவாக்கும் வகையில் முத்துகுமார் தன்னை எரியூட்டி தனது எழுத்தை ஒளியூட்டிய தருணத்தில் அதற்கு மறுநாள் இவர்கள் நாடகம் நடத்தி களிப்புற்றுக் கொண்டிருந்தனர். அந்த வக்கிர நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்து பகன்ற மாமாமனிதர் ஹிந்து ராம். CPMமும், சிங்கள இன வெறி கட்சி ஜேவிபியும், இந்து ராமும் இணையும் புள்ளி இதுதான். மக்களுக்கு பாசிசம். இந்த இந்து ராம்தான் ஈழம் என்ற வார்த்தையைக் கூட தனது பத்திரிகையில் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக தமிழீழ என்று ஆரம்பிக்கும் அமைப்புகளின் பெயரை சிங்கள தமிழ் என்று எழுதும் வக்கிர புத்திக்காரன். இவந்தான் சிங்கள இன வெறி அரசின் இந்திய கைக்கூலி அல்லது ஆசனவாய். இலங்கையில் கழியாமல் அஜீரமானதை இங்கு முடை நாற்றமெடுக்க நசுக்குபவன்.CPM கும்பல் கொள்கை முரன்பாடின்றி பன்னாட்டு தரகு முதலாளிகளுக்கு காவடி தூக்கி வருகின்றனர். எனவேதான் தமது மாநிலத்தில் நந்திகிராமில் பன்னாட்டு தரகு முதலாளிகளுக்காக மக்களை சுட்டு பொசுக்குவதை செய்த இவர்களால், இந்திய தரகு முதலாளிகளுக்காக இலங்கை எனும் ஒரு நாட்டில் ஒரு இனத்தையே அழித்தொழிக்கும் யுத்தத்தை ஆதரிக்க முடிகிறது. கேட்டால் இறையாண்மை, ஜனநாயகம், சட்டம் என்று நல்லவன் போல பேசவும் முடிகிறது. மக்களின் மீது குண்டுகளும், துப்பாக்கிகளூம் பாயும் போது உனது சட்டமும், ஜனநாயகமும், இறையாண்மையும் எங்கே நக்கிக் கொண்டிருந்தது என்று நியாயமாக நாம் கேட்க வேண்டும். ஆனால் அப்படி கேட்க்கும் அளவு CPM கும்பல் தகுதியானவர்கள் அல்ல.இந்திய முதலாளிகளின் தெற்காசிய கனவுகளுக்கு ஈழத்தை சுடுகாடாக்காதே! இந்திய அரசே இலங்கையில் தலையிடுவதை நிறுத்திக் கொள்!! CPM கும்பலே உனது மோசடித்தனத்தை மூட்டை கட்டி வைத்துக் கொள்!!!

அசுரன்

மாவீரன் முத்துக்குமாரின் தியாகம் - உணர்வாளர்களின் எழுச்சியும், துரோகிகளின் இகழ்ச்சியும்!...ஈழம்: இந்தியாவின் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு தமிழ‌கத்தில் பிரச்சாரம்
ஒரு இந்தியனாக, சிங்களர்கள் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகிறேன்!!பாசிசமும் சர்வதேசியமும் இந்தியத் தோழர்களும்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு, நாம் விடுக்கும் பகிரங்க வேண்டுகோள் சர்வதேசியத்தை கைவிட்டா ஈழப்போராட்டத்தை அணுக வேண்டும்!?
ஈழமும் முத்துக்குமாரின் தியாகமும் - நமது கடமை என்ன?

Thursday, January 22, 2009

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு



முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு

நாள் : ஜனவரி 25, 2009,
டாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானம்,
எஸ்.வி. நகர், ஓரகடம், அம்பத்தூர்



காலை அமர்வு காலை 10 - 1 மணி



கருத்தரங்கம்:

தலைமை : தோழர் அ. முகுந்தன்
மாநிலத் தலைவர்
புதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணி

சிறப்புரை:
தோழர் கவிஞர் துரை. சன்முகம்
மக்கள் கலை இலக்கியக்கழகம்

வழக்குரைஞர்: சி.பாலன்
உயர் நீதிமன்றம் பெங்களூரு

1-2 உணவு இடைவேளை




இரண்டாவது அமர்வு 2-5

சிறப்புரை :
சு.ப.தங்கராசு
மாநில‌ பொதுச்செயலாளர் பு.ஜ.தொ.மு

பா.விஜயகுமார்
மாநில‌ பொருளாலர் பு.ஜ.தொ.மு

நன்றியுரை:
தோழர் இல.பழனி


மாலை 6 மணி

பொதுக்கூட்டம் கலை நிகழ்ச்சி‌‌

சிறப்புரை
தோழர் மருதையன்
பொதுச்செயலாளர் மக்கள் கலை இலக்கியக்கழகம்


இறுதியாக‌ மக்கள் கலை இலக்கியக்கழக மையக்கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி‌‌ நடை பெறும்

நடை பெறும் இடம் அம்பத்தூர் OT மார்கெட்
தொடர்புக்கு


அ. முகுந்தன்: 94448 34519, 94444 42374
பாண்டியன்: 9941175876


அனைவரும் வருக‌

நன்றி
சிறப்புத்தளங்கள்

Thursday, July 24, 2008

விடுத‌லையான‌ பின்னூட்ட‌ங்க‌ள் !

அடிமைத்த‌னத்தை வெறுக்கும்
அடிமையிடம் தான் சுயமரியாதை இருக்கும்,விடுதலை வேட்கையும் இருக்கும் .மன்மோகன் சிங் போன்ற மாமாப்பயல்களுக்கு உடலில் எந்த உணர்ச்சியுமே இல்லை என்பதை நாடே அறிந்து வருகிறது.எஜமானின் சாட்டை மீது மாளாக்காதல் கொண்டிருக்கும் இந்த அடிமைக்கு ஒவ்வொருமுறையும் ஆண்டையிடமிருந்து உத்தரவுகள் பிறக்கும் போது தான் உயிரே வருகிறது. அடிமையாக அல்ல,அடிமையிலும் கேடுகெட்ட அடிமையாக அமெரிக்க ஆண்டானுக்கு தொன்டூழியம் செய்வதற்கென்றே பிறப்பெடுத்துள்ள இந்த பிணத்திடம் போயி...
சுதந்திரம் என்கிற வார்த்தை எப்படி இனிக்கும் தெரியுமா?
இதோ இப்படி சொல்லுங்கள் ஐயா, சு‍-த-ந்-தி-ர-ம், சுதந்திர‌ம் என்று பாட‌ம் ந‌ட‌த்திக்கொண்டிருப்ப‌வ‌னை ப‌ற்றி நீங்க‌ள் என்ன‌ நினைக்கிறீர்கள் ?

ம‌ன‌நிலை பிற‌ழ‌ வாய்ப்பே இல்லாத‌ ம‌ன்மோக‌னுக்கும் அதை ஒத்த மற்ற‌ பிற‌விக‌ளுக்கும் நிச்ச‌ய‌ம் அப்ப‌டிப்ப‌ட்ட‌ ஒருவ‌ன் க‌ச‌ப்பான‌ எதிரி தான் ஆனால் நம்மைப்போன்ற ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு இது போன்ற‌ ஒருவ‌னை மறை க‌ழ‌ண்ட‌ ம‌ங்குனி என்று புரிந்து கொள்வ‌து ஒன்றும் சிர‌ம‌மான‌ காரிய‌ம் அல்ல‌.

இப்ப‌டி ஒருத்த‌ன் ரெண்டு பேர் இல்ல‌ ஒரு க‌ட்சியே ம‌ன்மோக‌னை அடிமைத்த‌ளையிலிருந்து மீட்க‌ அதாவ‌து ம‌ன்மோக‌னுக்கு எதிராக‌ க‌டந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது,வெளியே வந்த பிறகு அந்த முயற்சியின் தீவிரம் குறைந்தாலும் தற்போதும் அதே நோக்கத்தோடு தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் அவர்களின் தற்போதைய பேச்சுக்கள் காட்டுகிறது.‌ நான்காண்டுக‌ளாக‌ இட‌துசாரிக‌ளின் வ‌தைக‌ளை எல்லாம் தாங்கிக்கொண்ட‌ ம‌ன்மோக‌ன் த‌ன‌து வில‌ங்குக‌ள் உறுதியாக‌த்தான் பிணைக்க‌ப்ப‌டுள்ள‌ன‌ என்ப‌தையும்,த‌ன‌து சேவைக்கால‌ம் வெற்றியின் மூல‌ம் நீட்டிக்க‌ப்ப‌ட்டுவிட்ட‌து என்ப‌தையும் அறிந்துகொண்ட மறுகண‌‌ம் ஒன்றைச்சொன்னார் 'இட‌துசாரிக‌ள் என்னை அடிமை போல‌ ந‌ட‌த்த‌ முய‌ன்றார்க‌ள்,அவ‌ர்க‌ளிட‌ம் நான் அடிமையாக‌ இருக்க‌ வேண்டும் என்று விரும்பினார்க‌ள்' என்று வேதனையோடு த‌ன‌து குமுற‌லை வெளியிட்டார்.இவ்வளவு நடந்த பிறகு இப்போதும் கூட CPM வீர‌ர்க‌ள் விடுவ‌தாயில்லை.. ஒரொன்னு ஒன்னு.. ஈரொன்னு ரெண்டு என்று வாய்ப்பாட்டை துவங்கிவிட்டார்கள். "அணுச‌க்தி ஒப்பந்த‌‌த்திற்கு யாரிட‌மும் ஆத‌ர‌வு இல்லை எனவே காங்கிரசு இந்த ஒப்பந்தத்தை போடக்கூடாது" என்ற‌ வாய்ப்பாட்டை பாடியுள்ளார்கள்.

'அட‌ப்பாவி உங்க‌ளை திருத்த‌வே முடியாதாடா' என்று தான் கேட்க‌த் தோன்றுகிற‌து.
இவ‌ங்க கட்ச்சித்தலைவங்க‌ எப்ப‌டி சொன்ன‌தையே திரும்ப‌த்திரும்ப‌த் வாய்வலிக்காம‌ சொல்றாய்ங்க‌ளோஅதே போல‌த்தான் இவ‌ங்க‌ க‌ட்சியில‌ உள்ள‌ திருவாளர் ச‌ந்திப்பிலிருந்து அத்த‌னை பேரும் சொன்ன‌தையே ப‌ல‌ வ‌ருச‌மா சொல்லிக்கிட்ருக்காய்ங்க‌‌. ச‌ந்திப்பே தேவ‌லாம் போல, ச‌ந்திப்பை விட‌ அப்ப‌னுக்கு அப்ப‌னைப் போல‌ ஒரு ஆளு வ‌ந்திருக்கிறார் பேரு விடுத‌லையாம். ந‌ம‌து பிளாக்கில் ஒரே க‌மெண்டை திரும்ப‌த்திரும்ப‌ போட்டுக்கொண்டே இருக்கிறார்.ஒரு க‌ட்ட‌த்தில் என‌க்கு இவ‌ர் புத்தி பேத‌லித்த‌வ‌ரோ என்று கூட‌ தோன்றிய‌து.ஹிஸ்டீரியா வ‌ந்த‌வ‌னைப்போல‌ ஒரு சில‌ வார்த்தைக‌ளை ப‌ட‌ப‌ட‌ப்போடு ச‌லிக்காம‌ல் மீண்டும் மீண்டும் சொல்லி வ‌ருகிகிறார். இந்த‌ பிளாக்கில் அவ‌ருடைய‌ முத‌ல் ஹிஸ்டீரியா க‌மெண்ட் வ‌ந்து விழுந்த‌ போது அதை நான் இய‌ல்பாக‌ எடுத்துக்கொண்டேன்.பிற‌கு அவ‌ரை விவாதிக்க‌ அழைக்க‌லாம் என்று எண்ணி பொறுமையாக‌த்தான் அனுகினேன்.ஆனால் க‌ட்சியின் மேலேயிருந்து கீழே வ‌ரை எல்லாமே ‌ஒரொன்னு ஒன்னு.. பார்ட்டிக‌ள் தான் என்ப‌து ஏனோ பிறகு தான் புரிந்தது.

இவ‌ர் க‌மெண்டுக‌ளில் ப‌ல‌ வீர‌ வ‌சனங்களை பேசி ச‌வ‌டால் அடித்துள்ளார். ம‌.க‌.இ.க‌ வை ப‌ற்றிய‌ உண்மைக‌ளை அறிந்து கொள்ள‌ கார‌ப்ப‌ட்டுக்கு போய் பார்க்க‌ வேண்டுமாம்.
உண்மை தான்,வ‌ர‌த‌ராஜ‌னையும்,யுப்பி காம்ரேடு யெச்சூரியையும் கார‌ப்ப‌ட்டிற்குள் கால‌டி எடுத்து வைக்க‌ச்சொல்லு ந‌ல்லா பிஞ்சு போன‌ வெள‌க்குமாத்தாலேயே வ‌ர‌‌வேற்பு கிடைக்கும்.ம‌க்க‌ள் காத்துக்கொண்டிருக்கிறார்க‌ள்!

ம‌ற்ற‌வ‌ர்க‌ளை கார‌ப்ப‌ட்டிற்கு போக‌ச்சொல்வ‌து இருக்க‌ட்டும் இவர்களுடைய க‌ட்சியிலிருந்து ஒரு நாலு பேரு போயி 'கார‌ப்ப‌ட்டில் ந‌ட‌ந்த‌து என்ன‌' என்று ஒரு விள‌க்க‌ கூட்ட‌ம் போட்டு ந‌ட‌ந்த‌தை விள‌க்க‌ வேண்டிய‌து தானே அதை செய்ய‌ இந்த‌ பேடிக‌ளுக்கு துணிவில்லை மாறாக‌ ந‌ட‌ந்த‌தை அப்ப‌டியே திருப்பிப்போட்டு ஜெய‌ல‌லிதாவை விட‌ கேவ‌ல‌மாக‌ பெய் பேசுகிறார்க‌ள்.
பிற‌கு ந‌க்ச‌ல்ப‌ரி இய‌க்க‌ம் ப‌ற்றி தியாகுவின் ஒரு நேர்காண‌லை க‌மெண்டாக‌ போட்டிருக்கிறார்.

தியாகு என்ன‌ சொல்ல‌ வ‌ருகிறார் அதை வைத்துக்கொண்டு இந்த‌ ம‌ங்குனி என்ன‌ செய்ய‌ நினைக்கிறார் என்ப‌து ந‌ம‌க்கு ந‌ன்றாக‌ புரிகிற‌து. ந‌‌க்ச‌ல்ப‌ரி இய‌க்க‌ம் அத‌ன் வ‌ர‌லாறு எதையும் அறியாத‌ இந்த‌ முட்டாள் ந‌ம்மை ஆயுத‌ம் ஏந்தி போராடும் நக்சலிச அமைப்பு என்று கூறி த‌னிமைப‌டுத்த‌ நினைக்கிறது.மாவோயிஸ்டுக‌ளுக்கும் ந‌ம‌க்கும் என்ன‌ வேறுபாடு என்றெல்லாம் தெரியாமல் இவ‌ர் இதை செய்ய‌வில்லை அத்த‌னையும் தெரிந்து கொண்டு செய்யும் அயோக்கிய‌த்த‌ன‌ம் இது.

க‌டைசியாக‌ இவ‌ருடைய‌ க‌மெண்டுக‌ளை நாம் இருட்ட‌டிப்பு செய்துவிட்டோமாம் அதை உட‌னே போடு என்று ஒரு க‌மெண்ட். ஆமாம் ஆமாம் இவ‌ருடைய‌‌ க‌மெண்ட் வெளியானால் ம‌.க‌.இ.க‌ அப்ப‌டியே ம‌க்க‌ளிட‌ம் அம்ப‌ல‌ப்ப‌ட்டு போய்விடுமே அதனால் பயந்துபோனதால் தான் நாம் அதை இருட்ட‌டிப்பு செய்ய‌ முய‌ற்சித்தோம் க‌டைசியில் விடுத‌லை விடாப்பிடியாக‌ போராடிய‌தால் எங்கே அம்ப‌ல‌ப்ப‌ட்டுவிடுவோமோ என்று அஞ்சிப்போய் இப்போது வெளியிட்டுவிட்டோம்.அனைவரும் தயவு செய்து அந்த காமெடி பின்னூட்டங்களை மறக்காமல் வாசிக்கவும்.

கடைசியாக‌உன்னைப் போன்ற‌வ‌ர்க‌ளுக்கென்றே 'ஆன்ட‌ன் செக்கவ்' ப‌ல‌ க‌த‌க‌ளை எழுதியுள்ளார் அதில் ஒன்று " கூண்டில் அடைபட்ட ம‌னித‌ர்" முத‌லில் அதையெல்லாம் ப‌டிச்சுட்டு வா அப்புற‌மா விடுத‌லையை ப‌ற்றியெல்லாம் பேசுவோம். அப்புற‌ம் உன்னுடைய‌ இது போன்ற‌ லூசுத்த‌ன‌மான‌ க‌மெண்டுகளையெல்லாம் இனிமேல் இங்கே போடாதே அவை இனிமேல் பிர‌சுரிக்க‌ப்ப‌ட‌மாட்டாது.

Saturday, June 21, 2008

ஆயுதத்தை கைகள் நடுங்க கோழைத்தனமாக ஏந்திவிட்ட‌ கூலிப்படை பொறுக்கி கும்பல்

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணி(வி.வி.மு)தமிழகம் முழுவதும் இயங்கி விவசாயிகளை அமைப்பாக்கி வருகிறது.விழுப்புரம் மாவட்டம் காரப்பட்டு என்கிற பகுதியிலும் வி.வி.மு செயல்பட்டுவருகிறது.
எம‌து அமைப்புக‌ள் வைக்கும் விம‌ர்ச‌ன‌ங்க‌ளை எதிர்கொள்ள‌ துனிவ‌ற்ற போலிக்கம்யூனிஸ்டு கோழைக‌ள்.தொட‌ர்ச்சியாக‌ நாம் வைக்கும் விம‌ர்ச‌ன‌ங்க‌ளை ச‌கிக்க‌ முடியாம‌ல்,பொறுத்துக்கொள்ள‌ இய‌லாம‌ல் ஆயுத‌த்தை கையிலேந்தியிருக்கிறார்கள்.
நேற்று மாலை காரப்பட்டு பகுதியிலுள்ள வி,வி,மு அமைப்பின் ஆதரவாளர் ராஜேந்திரன் என்கிற தோழரை திட்டமிட்டு படுகொலை செய்திருக்கிறார்கள்.பல தோழர்களை கடுமையாக தாக்கி கொலை செய்ய‌ முயற்சித்திருக்கிறார்கள். நேருக்கு நேர் எதிர் நிற்க‌ துணிவற்ற இந்த கோழை நாய்கள் எதிர் பாராத தருணத்தில் கூலிப்படையைபோல திட்டமிட்டு தோழர்களை தாக்கி கொலை வெறியாட்டம் போட்டிருக்கிறது.
அருவருப்பான இந்த கோழைகளுக்கு இது வரை விமர்சனங்கள் மட்டும் தான் ஆயுதமாக ஏந்தப்பட்டது.இனி இது போன்ற இடங்களில் இவர்களுக்கு ஆயுதங்களின் வழி தான் விமர்சனங்கள் வழங்கப்படும்!!


தொடர்புடைய இனைப்புகள்.
நன்றி
தோழர் அசுரன்,சூரியன்

மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் தாண்டா நாங்கள் - CPM!

கம்யுனிஸ்டு பார்ட்டி ஆப்பு இந்தியா - CPM வெறி நாயும்! CPIயும்!

SEZயை எதிர்த்த பார்வேர்ட் ப்ளாக் கட்சியினர் ஐந்து பேர் CPM அரசால் சுட்டு சாகடிக்கப்பட்டனர்

CPM government has shot killed five Forward Bloc party persons over Anti SEZ protest


உண்மைத்தோழர்களே நீங்கள் டாடாயிஸ்டா கம்யூனிஸ்டா ?
ஞானேந்திரா புரட்சி செய்வான் என்பது எவ்வளவு உண்மையோ அந்த அளவிற்கு தூய‌ உண்மை CPM கட்சி புரட்சி செய்யும் என்பதும்.இருந்தும் ஏன் இன்னும் மக்கள் நலனையும்,புரட்சியையும் நேசிக்கும் உண்மையான தோழர்கள் அதிலிருந்து வெளியேறாமலிருக்கிறார்கள்? ஒருவேளை CPM என்றைக்காவது புரட்சி செய்யும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்களா? இருக்கலாம்.ஆனால் வெளியிலிருக்கிற யாரும் அப்படி நம்பவில்லை. குறிப்பாக CPM மோடு சாக்கடையில் புரண்டெளும் எந்த ஒட்டுப்பொறுக்கியும் அப்படி நம்பவே இல்லை.ஒருவன் தன்னைப்பற்றி தானே கொண்டுள்ள அகரீதியான மதிப்பீடுகள் சரியானவை அல்ல மாறாக புற நிலை மதிப்பீடுகள் தான் துல்லியமானவை. தான் புரட்சி செய்யப்போவதாக எந்த கட்சி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்,ஆனால் அந்த கட்சி குறித்து எதிரி என்ன மதிப்பீடு வைத்துள்ளான் என்பது தான் முக்கியமானது. அந்த வகையில் எந்த எதிரிகளாலும் அவனுடைய ஆபத்தான எதிரியாக கருதப்படாத‌,அவ்வளவு ஏன் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படாத கட்சியாகத்தான் CPM உள்ளது.அதாவது எதிரிகளுடைய மதிப்பீட்டின் படி CPM ஒரு கோமாளிக் கட்சி மட்டுமே. இவையெல்லாம் அந்த கட்சியிலிருக்கும் உண்மையான‌ தோழர்களுக்கு தெரியாதா? உணர்வுப்பூர்வமான தோழர்கள் ஏன் இன்னும் அதில் இருக்கிறார்கள்?CPM புரட்சி செய்யும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்களா?இருக்கலாம். ஒரு வேளை அந்த நம்பிக்கையில் கூட‌ அவர்கள் இருக்கலாம்.அதற்கான நியாயமும் கூட உள்ளது! CPM தனது அணிகளுக்கு புரட்சி என்றால் என்னவென்றே சொல்லித்தருவதில்லை.மார்க்சிய கோட்பாடுகள் குறித்து எந்த பயிற்சியும் அளிப்பதில்லை. தனது அணிகளை CPM இவ்வாறு வைத்திருப்பது தற்செயலானது அல்ல அவர்களை மார்க்சிய கண்ணோட்டமற்ற செக்கு மாடுகளாக‌ திட்டமிட்டே தான் வளர்க்கிறார்கள். திரிபுவாதம் அதன் துவக்கப்புள்ளியில் மட்டும் தான் அறியாத பிழையாக‌ கருக்கொள்கிறது, அதன் பிறகு அது உணர்வுப்பூர்வமான தன்மைக்கு பரிணமித்து எதிர் நிலையில் பயணிக்கிறது. CPMன் திரிபுவாதம் என்பது முழுக்க முழுக்கஉணர்வுப்பூர்வமானதாக மாறிவிட்டது. எனவே தான் தனது அணிகளை திட்டமிட்டே குருடர்களாக்கி வைத்திருக்கிறார்கள் என்கிறோம். CPMன் சாரம் என்பது மக்களையும்,அணிகளையும் புரட்சிகர தன்மையிலிருந்து சமரச தன்மைக்கு இட்டுச்செல்லும் கம்யூனிச‌ மூடு திரையிட்ட‌ ஆளும் வர்க்க சேவையாகும்.ஒரே வரியில் சொல்வதெனில் போர்குன‌மிக்கவர்களை காயடிப்பதாகும். ஒரு க‌ம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினருக்கு விமர்சனங்களை இப்படி இப்படியெல்லாம் அனுக வேண்டும் என்று வெளியிலிருந்து யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை.ஏனெனில் விமர்சனம்-சுயவிமர்சனம் என்கிற முறை கம்யூனிஸ்ட் கட்சிகளில் மட்டும் தான் உண்மையோடும்,உயிர்ப்போடும் உள்ளது. CPM தனது அணிகளுக்கு விமர்சன-சுயவிமர்சன முறையை க‌ற்றுத்தருவதில்லை எனவே தான் அந்த தோழர்களும் ஏன் நீங்க எப்ப பார்த்தாலும் எங்களையே திட்டுறீங்க என்கிறார்கள்.அவ்வளவு ஏன் புதியகலாச்சாரம்,புதியஜனநாயகம் இதழ்களை படிக்கக்கூடாது என்று தனது அணிகளை தடுப்பது என்ன முறை? விமர்சன-சுயவிமர்சன முறையா? பாசிஸ்ட் தத்துவத்தை வைத்திருக்கும் RSS காரன் கூட அனைத்தையும் படிக்கிறான்.ந‌மது இதழ்களையும் தொடர்ச்சியாக படிக்கிறான் புக,புஜ படிப்பதால் அவனுக்கு எந்த பயமும் இல்லை.CPM க்கு மட்டும் ஏன் பயம்? தனது கூடாரம் காலியாகிவிடும் என்கிற பயம் தான் அது. அந்த பயம் தான் தனதுஅணிகளுக்கு விமர்சன-சுயவிமர்சன முறையை க‌ற்றுத்தராமல் தடுத்து வைத்திருக்கிறது.அந்த பயத்திலிருந்து தான் அதை படிக்க வேண்டாம் இதை படிக்க வேண்டாம் என்று தடுக்கிறார்கள்.CPM குறித்த விமர்சனங்களை நாம் மட்டும் வைப்பதில்லை பல்வேறு அமைப்புகளும் பல்வேறு கோணங்களிலிருந்து அவற்றை முன் வைக்கிறார்கள்.ஆனால் நாம் மட்டும் தான் தொடர்ச்சியாகவும்,ஆழமாகவும் விமர்சிக்கிறோம். நமது விமர்சனத்தின் ஆழம் தான் அதன் மொழி நடையை கடுமையாக்குகிறது.எனவே விமர்சனங்களை அந்த தோழர்கள் CPM மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளாகவும்,CPM ஐ திட்டுவதாகவும் பார்க்காமல் விமர்சனத்தின் உட்பொருளை, உண்மைத்தன்மையை பார்க்க வேண்டும்.அதன் நியாயத்தையும், அது சரியானதா என்பதையுமே பார்க்க வேண்டும். விமர்சனங்களை அவ்வாறு பாராபட்சமற்ற முறையில் பார்க்கும் பட்சத்தில் விமர்சணத்தின் நேர்மையையும்,நியாயத்தையும் உணரமுடியும்.சரியானதை வந்தடைய முடியும். இவ்வாறு அவர்கள் முன்முடிவுகளற்ற முறையில் சரியானதை தாமே முன் வந்து அறிந்து கொள்ளாதவரை, புரட்சியை அதன் செறிவான பொருளில் அறிந்துகொள்ளும் வரை CPM என்கிற‌ இருட்டறையிலிருந்து வெளியேற இயலாது. தனது அணிகள் மேற்கூறியவற்றையெல்லாம் அறிந்து கொள்ளாமலிருப்பதைத்தான் CPM விரும்புகிறது.அதில் தான் CPMன் நலனும் அடங்கியிருக்கிறது.அந்த தோழர்கள் புரட்சி,பாட்டாளி வர்க்கம்,கட்சி பற்றியெல்லாம் மேலும் விரிவாகவும்,உண்மையான பொருளிலும் அறிந்து கொள்ளும் தருணங்களில் CPM தன் அந்திமக்காலத்தை நெருங்கும் .அந்த தருணம் விரைவில் வரும்.அப்போது இது செத்து அடங்கும்.தேடுறான்,தேடுறான் புர‌ட்சிஇன்னும் கைக்கு சிக்க‌வில்லை..க‌டலில் மூழ்கி முத்தெடுப்பதைப்போல பாராளுமன்றம் என்கிற‌ சாக்கடையின் முடை நாற்றத்தை எப்படியாவது பொறுத்துக்கொண்டு,முக்கித்தின‌றி மூக்கைப்பொத்திக்கொண்டாவது மூழ்கி அதிலிருந்து எப்படியாவது புரட்சியை கண்டுபிடித்துவிட CPM கடந்த அரை நூற்றாண்டுக்குகளுக்கும் மேல் கடுமையாக‌ முயற்சித்துவருகிறது.எனவே அவ்வாறான ஒரு புரட்சியை சாதிக்க வெள்ளைக்காரன் பெற்றெடுத்த‌ கைக்கூலி கட்சியான‌ காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் சோத‌ணைக்கும், வேதணைக்கும் ஆட்பட்டுள்ளது. CPM முதுகில் தூக்கிச்சுமக்கும் இந்த காங்கிரசு தலைமையிலான அரசு தான் தற்போதைய நம்முடைய அணைத்து பிரச்சனைகளுக்கும் காரண‌மான‌‘தனியார்மய,தாராளமய,உலகமய’ கொள்கைகளை நடைமுறைப்படுத்தி ஏகாதிபத்திய நாய்களுக்கு அடிமைச் சேவகம் செய்து வருகிறது. இந்த‌ கொள்கைகள் தான் நம் மண்ணின் மைந்தர்களை, ந‌மக்கு உணவளித்த விவசாயிகளையும், ந‌ம் மானம் காத்த நெசவாளிகளையும், ந‌ம் மலத்தை அள்ளினால் தான் உணவு என்று வாழும் துப்புரவுத் தொழிலாளிகளையும் நாளும் பச்சைப்படுகொலை செய்துவ‌ருகிறது. இந்த 'ம‌றுகால‌னியாதிக்க‌ கொள்கைகள்'CPM ன் தயவால் இன்னும் கோடிக்க‌ண‌க்கான‌ உயிர்க‌ளை காவு வாங்க‌‌வும் காத்திருக்கிற‌து.மக்களுக்கெதிரான‌ காங்கிரசின் அத்தனை துரோகங்களுக்கும் துணை போகும் CPM இன்னொரு பக்கம் தானும் இவற்றையெல்லாம் எதிர்ப்பதாக கூறுகிறது. நாட்டை காட்டிக்கொடுப்பவனோடு கூட்டு சேர்ந்து கொண்டு நானும் நாட்டுப்பற்றுள்ளவன் தான் என்று கூற CPM க்கு எவ்வளவுதுனிச்சலிருக்க‌ வேண்டும் ? இவர்கள் காங்கிரசோடு சேர்ந்துகொண்டு நாட்டைக்கூறு போடும் கொள்கைகளுக்கு துணை போவதை இந்த நாடே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. இருந்தும் அது பற்றி கொஞ்சம் கூட வெட்கமே படாமல் நானும் இதையெல்லாம் எதிர்க்கிறேன் என்று சொல்ல இவர்களுக்கு எவ்வளவு துனிச்சலிருக்க‌ வேண்டும்? எந்த தைரியத்திலிருந்து இவ்வாறெல்லாம் பேசுகிறார்கள் என்பதையும் இவையெல்லாம் எவ்வளவு பச்சை பொய்கள் என்பதையும் CPM ல் உள்ள தோழர்கள் தான் யோசித்து பார்க்கவேண்டும். தனியார்மய,தாராளமய‌ கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் காங்கிரசு தலை என்றால் காம்ரேடுகள் தான் வால்.வாலை பின்னங்கால்களுக்கிடையில் சுருட்டிக்கொண்டால் அது இல்லவே இல்லை என்றாகிவிடுமா.வாலாக இருந்து நாசகார கொள்கைகளை மே.வங்கத்தில் நிலைநாட்ட முயன்று நாறிப்போனதை இந்த நாடே பார்த்தது.அங்கே தன் வாழ்வாதாரங்களை காப்பாற்றிக்கொள்ள போராடி இவர்களால் கொலை செய்யப்பட்ட தியாகிகளுக்கு பதில் கூறாமல் இவர்கள் தப்பி விட முடியுமா? இது போன்ற எத்தனை எத்தனை துரோகங்கள் அத்தனைக்கும் இந்த துரோகிகள் உழைக்கும் மக்கள் உருவாக்கும் தீர்ப்பு மேடையில் பதில் சொல்லியே ஆக வேண்டும். CPMன் துரோகத்தனங்களை அறியாமல் இந்த துரோகிகள் பின்னால் செல்லும் தோழர்களே…துரோகிகளோடு சேர்ந்து இந்த‌ அவப்பெயரை நீங்களும் சுமக்க நேரிடும்… சிந்தியுங்கள் தோழர்களே.நாம் கேட்கும் எந்த கேள்விகளுக்கும் இவர்கள் இதுவரை பதில் கூறியதில்லை,இனியும் கூறுவார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை.மாறாக‌ வ‌கைவ‌கையான‌ முத்திரைக‌ளைத்தான் குத்துவார்க‌ள்.அருந்ததிராயையும்,மேதாபட்கரையுமே கூசாமல் மாவோயிஸ்டுகள் என்று கூறிய யோக்கியர்கள்,அதையே உண்மை என்று தமது அணிகளையும் ந‌ம்பவைத்தவர்கள் நம்மையெல்லாம் சர்வதேச பயங்ரவாதி புக்ஷ்சின் கூட்டாளி என்று தான் கூறுவார்கள். இவ‌ர்களை கம்யூனிஸ்டுகள் என்றும்,அதை கம்யூனிஸ்டு கட்சி என்றும் நம்பிச் செல்லும் தோழர்கள் தான் அவர்களின் நேர்மையற்ற செயல்களையும்,பொறுப்பற்ற பதில்களையும் கூர்ந்து நோக்கி அவையெல்லாம் எவ்வளவு வழவழ கொழகொழ மழுப்பல்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். CPM பற்றி ஒரு முடிவிற்கும் வரவேண்டும்.வெளியிலிருந்து கேட்கப்படும் அணைத்து கேள்விகளுக்கும் நேர்மையாக பதில் கூறுமாறு கட்சியை வலியுறுத்த‌‌ வேண்டும்.டாட்டா எனக்கு கூட்டாளிபாட்டாளிக்கு பகையாளி'டாடாவுக்கும்,எனக்கும் உள்ள‌ நட்பை முறிக்க முடியாது,அவரை என்னால் வெளியே போகச்சொல்ல முடியாது' என்று கூறினாரே புத்ததேவ் பட்டாச்சார்யா அந்தகொலைகார தரகு முதலாளி டாடாவுக்கும் இந்த 'பாட்டாளிவர்க்கத் தலைவன்' பட்டார்ச்சார்யாவிற்கும்‌இடையிலான‌ ந‌ட்பு 'துளிர்க்கவே' நந்திகிராமத்தில் இத்தனை உயிர்கள் பறிக்கப்ப‌டவேண்டியிருந்தது என்றால் அந்த கேவலம் உறுதிப்படவேண்டும் என்றால் நிலைமை என்னவாகும்? இப்பவே புத்ததேவுக்கு பார்ப்பன‌ பயங்கரவாதி அத்வானி ஃப்ரெண்டு.அப்புறம் என்ன குஜராத்தில் ஒரு விசித்திர விலங்கு இருக்கிறதே அதுவும் ஃப்ரெண்டாகி விடும். பிறகு நட்பை நன்றாக 'உரமிட்டு' வளர்ப்பார்கள்.மே.வங்கத்தில் நண்பன் டாடாவிற்காக இவர்கள் போராடியது கொஞ்சமா நஞ்சமா, உயிரையெடுத்தல்ல‌வா போராடினார்கள் !தன் வாழ்வாதாரங்களை காத்துக்கொள்வ‌தற்காக, தன் குழந்தையைப்போல் கருதிய விளை நிலங்களை எவ்வாறேனும் இந்த கொலைகாரர்களிடமிருந்து காப்பாற்றிவிட‌‌ ஒரு தாயைப்போல அந்த எழுதப்படாத காகிதங்களான‌ (கார்க்கி) அப்பாவி விவசாயிகள் என்னென்ன் விதமாகவெல்லாம் போராடினர்கள் ,எத்தனை பினங்கள் விழுந்தது.அணைத்தையும் இந்த நாடே பார்த்ததே.உயிரைக் காத்துக்கொள்ள‌ அவர்கள் நடத்திய‌ போராட்டங்களெல்லாம் என்ன தொழிலாளி வர்க்க கட்சிக்கெதிரான எதிர்புரட்சி வேலைகளா,சதியா? சொல்லுங்கள் தோழர்களே? விவசாயிகளையும்,உழைக்கும் மக்களையும் நேசிக்கும் உங்களுக்கு அவ்வாறு சொல்ல நா எழாது. ஆனால் உங்கள் கட்சி அந்த அப்பாவி விவசாயிகளுக்கு அப்படித்தான் முத்திரை குத்தியது,தனது பயங்கரவாத கொலை முகத்தை ம‌றைத்துக்கொள்ள அவர்களை பயங்கரவாதிகளாக்கியது. அவர்கள் அணைவரும் வெளியிலிருந்து ஊடுருவிய மாவோயிஸ்டுகள், ந‌க்சலைட் பயங்கரவாதிகள் என்று ஊளையிட்டது.ஆனால் அதை அந்த‌ தரகு நாய் டாட்டா கூட நம்பியிருக்க‌மாட்டான்.உண்மையான பாட்டாளி வர்க்கத்தோழனுக்கு விவசாயி தோழன் என்பதும், டாடா தான் பயங்கரவாதி என்பதும் வகுப்பெடுத்து புரியவைக்க வேண்டிய விசயமல்ல‌.செய்யிற‌து த‌ர‌குப்ப‌ணிஉன‌க்கெதுக்கு சிவ‌ப்புத்துணி ?அன்னிய முதலீடு தான் ஏகாதிபத்தியங்கள் வீசும் காலனியாதிக்க‌ வலை என்பதை நீங்கள் அறியமாட்டீர்களா தோழர்களே? இது ஒரு புதிய காலனிய காலகட்டம் என்பதையும், இவை ஒப்பந்தங்கள் மூலமும்,கடன்க‌ள் மூலமும் மூன்றாம் உலக‌ நாடுகள் மீது தினிக்கப்படுகிறது என்பதையும் முதலாளித்துவ அறிஞர்களே எழுதியும் பேசியும் வரும்போது மார்க்சியத்தை 'கற்ற‌றிந்த' கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சீத்தாராம் யெச்சூரியோ 'அன்னிய முதலீடு தான் வேலைவாய்ப்பை அள்ளித்தரும்' என்கிறார். மார்க்சிய பொருளாதாரத்தின் அடிப்ப‌டியையே மறுக்கும் இந்த உலகமய பொன்மொழிக்கு என்ன வியாக்கியானம் சொல்ல முடியும்? நெம்பர் ஒன் ஏகாதிபத்திய‌ கைக்கூலிகள் அல்லது அடிமை புத்தியுள்ள அடிவருடிகள் மட்டுமே இவற்றுக்கெல்லாம் வியாக்கியானமும்,பொழிப்புரையும் எழுத முடியும். ஆனால் அப்பாவி ஜீவன்களான விவசாயிகளையும்,உழைக்கும் மக்களையும் நேசிக்கும்,அவர்களின் இழிந்த நிலையை மாற்றத்துடிக்கும்‌ தோழர்கள் எப்படி இது போன்ற‌ அம்மனமான,வெட்கங்கெட்ட முதலாளித்துவ சரக்குகளையெல்லாம் சகித்துக்கொண்டு இன்னும் அந்த கட்சியிலிருக்கிறார்கள் என்பது தான் புரியவில்லை.பார்ப்பனிய கீதையில் கண்ணன் கூறுவானே " நானே கொலை செய்தேன்,நானே கொல்லப்பட்டேன்" அதைப்போல‌ புரிந்துகொள்ளலாமா இதையெல்லாம்? இவர்களே நாசகாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதையும்,இன்னொரு பக்கம் அதை எதிர்ப்பதாக காட்டிக்கொள்ள‌ தமது அணிகளை உசுப்பேற்றி பந்த்,ஆர்ப்பாட்டம்,மறியல் என்று நடிப்பதையும் வேறு எப்படித்தான் புரிந்துகொள்வது? ஆனால் இந்த திருடன்,போலீஸ் விளையாட்டில் கேலிக்குள்ளாக்கப்படுவதும், முட்டாளாக்கி ஏமாற்றப்படுவதும் ஒன்றுமறியாத பொது மக்களா என்றால் இல்லை,அவர்களெல்லாம் எப்போதோ இவர்களை நம்புவதையெல்லாம் மூடநம்பிக்கை என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.மாறாக‌ கட்சிக்காக கொண்றெடுக்கும் வெய்யிலில் வீதிகளில் நின்று ஆர்ப்பட்டங்கள்,மறியல்களில் பங்கேற்று போலீஸ் நாய்களிடம் ரத்தம் வர அடி உதைபடும் உணர்வுப்பூர்வமான, கம்யூனிசத்திற்காக‌ உயிரையே சட்டையைப்போல கழற்றி வீச‌க்கூடிய அருமையான‌‌ தோழர்கள் தான் வஞ்சமாக ஏமாற்றப்படுகிறார்கள்.அவர்கள் விழித்தெழுந்து விழி சிவந்தால் சிவப்புக்கலர் கார்களில் பவனி வரும் அண்ணன்கள் உரிய இடத்திற்கு போய் சேருவார்கள்.கொள்கைகூட்டணிஒவ்வொன்னுக்கும்என்ன பின்னணி?ஏகாதிபத்திய பூட்ஸ் நக்கிகளான காங்கிரசு கைக்கூலிகளின் கடந்த நாண்காண்டு 'மேற்பார்வையில்' (அதாங்க ஆட்சிக்காலம்) எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்,எத்தனை நெசவாளிகளின் வீட்டில் இழவு விழுந்தது,எத்தனை பொதுத்துறை நிறுவனங்கள் தாரைவார்க்கப்பட்டன,எத்தனை சிறு தொழில்கள் ‌அடிஆழத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன, எத்தனை ஏக்கர் விளைநிலங்கள் விவசாயிகளின் அடி வயிறு பற்றி எரிய எரிய பறித்தெடுக்கப்பட்டன,எத்தனை முறை விலைவாசி உயர்ந்தது,வறுமைக்கோடு என்கிற உயிரோடு வறுத்தெடுக்கப்படும் எண்ணெய்ச்சட்டிக்குள் கடந்த‌ நான்காண்டுகளில் எவ்வ‌ளவு என்னிக்கையிலான மக்கள் தள்ளிவிடப்பட்டார்கள்,மொத்தத்தில் கடந்த‌ நான்காண்டுகளில் எத்தணை வீட்டுத் தாலிகள் அ‌றுக்கப்பட்டது,எத்தனை குடிகள் கெடுக்கப்பட்டது ??இவை அணைத்தும் லட்சக்கணக்கில்,கோடிக்கணக்கில் நடந்துள்ளது.விவசாயிகளின் தற்கொலைகள் மட்டும் 40.000 ஐ தொட்டுள்ளது.தோழரே,உங்க கட்சி ஏன் இன்னும் 'புரட்சி' நடத்த‌வில்லை என்கிற கேள்விகளையெல்லாம் நாங்கள் கேட்கவில்லை. இரண்டே இரண்டு கேள்விகளை மட்டும் கேட்கிறோம்.CPM தலைவர்கள் அதற்கு மட்டும் பதில் கூறட்டும்.1, பாரளுமன்றத்தில் புரட்சி செய்வதையெல்லாம் பிறகு பார்ப்போம்,குறைந்த பட்சம் மேற்கூறிய மறுகாலனியாதிக்க கொள்கைகளால் நடைபெற்ற‌ கொலைகள் எதையுமே தடுக்கமுடியவில்லையே,இதைக்கூட செய்யமுடியவில்லை என்றால் எதை சாதிக்க அங்கே போனார்கள் உங்கள் தலைவர்கள்?2 ,பன்றித்தொழுவத்தில் பல ஆண்டுகளாக படுத்து புரண்ட பழைய கதைகளையெல்லாம் விட்டுவிடுவோம்.என்ன நோக்கத்திற்காக பாராளுமன்றத்திற்கு போனீர்கள்? இந்த நாண்காண்டுகளில் மட்டும் பாராளுமண்றத்தில் பங்கேற்றதன் வழி மார்க்சிஸ்ட் கட்சி சாத்தித்தது என்ன?இத‌ற்கு மட்டும் CPM பதில் சொன்னால் போதும்.இதில் முக்கியமானது என்னவென்றால் பாராளுமன்றத்திற்கு போனதால் CPM ன் நோக்கம் நிறைவேறியதோ இல்லையோ அவர்களின் உதவியோடு ஆட்சியை பிடித்த மன்மோகன் தரகு கம்பெனியின் நோக்கங்கள் நிறைவேறியுள்ளது,தான் செய்ய நினைத்த அனைத்தையும் கைக்கூலிகளின் குருட்டுத் துணிச்சலோடு அச்சமின்றி செய்துவருகிறது அந்த கும்பல்.அவர்களின் நோக்கம் என்னவோ அது நிறைவேறியுள்ளது,மாறாக உங்களின் நோக்கம் என்ன? அந்த‌ இடத்தில் உங்களுக்கு என்ன வேலை? எதை நிறைவேற்றிக்கொள்ள அங்கே போனீர்கள்? அந்த நோக்கம் நிறைவேறியுள்ளதா? இதற்கெல்லாம் CPM ன் பதில் என்ன? இதுவரை எந்த‌ பதிலும் இல்லை.தோழர்களே,இவையெல்லாம் பொதுவாக‌ அனைவருக்கும் எழக்கூடியக் கேள்விகள் தானே? இத‌ற்கு ப‌தில் சொல்ல‌ வேண்டும் தானே மாறாக‌, CPM ஏன் பதில் சொல்ல‌ அஞ்சி பயங்கரவாதிகள் பட்டம் கட்டி திசை திருப்புகிறது.?இவற்றுக்கெல்லாம் மார்க்சிஸ்ட் கட்சியின் பதில் என்ன என்பதை கேளுங்கள்.இது வெறுமனே பதில் சொல்வதோடு முடிகிற காரியம் இல்லை தோழர்களே.ஒன்றுமறியாத‌ அப்பாவி மக்களின் உயிர் தொடர்பான பிரச்சனை.ஏனெனில் இந்த மன்மோகன்சிங் அரசு எத்தனை லட்சம் மக்களுக்கு புதை குழி வெட்டித் தள்ளி மூடியதோ அத்தணைக்கும் இவர்கள் துணை போயிருக்கிறார்கள்.தரகு வேலை செய்து வருகிறார்கள்.அரசு எவ்வளவு கொடிய‌ கொலைபாதகக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தினாலும் நாலு நாள் ஆர்ப்பாட்டம்,மறியல் என்று முடித்துக்கொண்டு குளிர்கால கூட்டத்தொடரில் படுத்துக்கொள்ள‌ பன்றிக்கூடார‌த்திற்கு போய்விடுகிறார்கள்.கடந்த நாண்காண்டு ஆட்சியில் மாண்டுபோன,வாழ்விழந்த,பாதிப்பிற்குள்ளான அணைவரின் நிலைக்கும் கரணமான‌ இந்த ஆட்சிக்கு முட்டுக்கொடுத்து கவிழாமல் காப்பாற்றியதன் மூலம் மக்களைக் கொண்றொழிக்க 'உதவி'யவர்கள் என்கிற பாத்திரத்தில் சிற‌ப்பாக பங்கேற்ற,பொதுவாக போலிக்கம்யூனிஸ்டுகள் என்றறியப்படும் மார்ர்க்சிஸ்டுகள் ஏன் இந்த ஆட்சியை காப்பாற்றி வருகிறோம் என்பதற்கும் இவ்வளவு தொகுதி மக்களின் இறப்பிற்கு யார் காரணம் என்பதையும் சரியான,தெளிவான‌ பதிலாக‌ கூற வேண்டும். காங்கிரசும் அதற்கு தரகு வேலை செய்யும் இவர்களும் தான் என்பது மாபெரும் ரகசியமா என்ன? ஆனால் CPM அதை சொன்னால் என்னவாகும்? அந்த நாயி தான் காரணம்னு தெரிஞ்சும் ஏன்டா அவனை ஆதரிச்ச? அப்படின்னா தெரிஞ்சே தான் இத்தனை கோடி மக்களோட வாழ்க்கையை நாசமாக்க அவனுக்கு உதவி செஞ்சியா? அனைத்து கேள்விகளுக்கும் பதில்களை இப்படி உடைத்து கூறிவிட்டால் அப்புற‌ம்‌ இப்படி வெங்காய மூட்டையை தூக்குபவரின் மொழியில் தான் கேள்விகேட்டு தெருக்குத் தெரு விசாரணைகள் நடக்கும். இதையெல்லாம் நினைத்தால் பயமாகத்தானே இருக்கும்,எனவே தான் CPM பதிலளிப்பதற்கு,பதிலாக கேள்வி கேட்பவரையே பயங்கரவாதி என்பதோடு வாயை மூடிக்கொள்கிறது.எனவே CPM ல் உள்ள‌ தோழ‌ர்க‌ள் தான் அதன் கோர‌வாயை திறந்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க‌ முயல‌ வேண்டும்.த‌னியார்ம‌ய‌ம்,தாராள‌ம‌ய‌ம்,உல‌க‌ம‌ய‌ம் என்கிற‌ இந்த‌ நாச‌கார‌ கொள்கைகளை கட்டாயமாக‌ மக்கள் மீது தினிப்பது என்பது அவர்கள் மீது தொடுக்கப்படும் கொடூரமான யுத்தமாகும்.இந்த‌‌‌ உல‌க‌ம‌ய‌மாக்க‌ல் கொள்கைகள் நாளும் எத்தனை பச்சைப்படுகொலைகளை செய்துவருகிறது என்ப‌தை நீங்க‌ள் அறிவீர்க‌ள்.இவ்வளவு நடந்த பிறகு இப்போதாவ‌து ஆதரவை வாபஸ் வாங்கிவிட்டு வெளியேற வேண்டியது தானே,ஏன் இன்னும் இந்த கொலைகார அரசை நமது கட்சி ஆதரிக்கிறது என்கிற சாதாரண கேள்வி கூடவா உங்களுக்குள் எழவில்லை? மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் காங்கிரசை ஆதரிக்கிறோம் என்கிற பதிலை உண்மை என்கிற மொழிக்கு பெயர்த்தெடுக்கும் பொழுது 'பாசிஸம் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் பாசிஸத்தை ஆதரிக்கிறோம்' என்று வந்து விழுகிறது.கைக்கூலிக் காங்கிரசை ஆதரிக்க இது போன்ற ஒரு மொக்கை பதிலை எப்படி இந்த மாக்சிஸ்ட் கட்சியால் கூறமுடிகிறது? கட்சி அப்படிக்கூறினாலும் உங்களால் எப்படித் தோழர்களே இது போன்ற ஒரு பொய்யை ஏற்றுக்கொள்ளமுடிகிறது? பா.ஜ.க வும்,பார்ப்பன ஜெயாவும் சித்தப்பா மக்க,பெரியப்பா மக்க என்கிற அறிவுகூட இல்லாத இவர்கள் தான் அந்த பார்ப்பனப் பேயோடு போய் கூட்டணி வைத்துக்கொண்டார்கள்.அதன் பிறகு அந்த மம்மி உர்ர்.. என்று மூஞ்சைக்காட்டிய‌தும், " ச்சே ச்சே.. அவர் இப்படிப்பட்ட ஒரு மதவாதசக்தி என்பதை தாமதமாகத்தான் உணர்ந்து கொண்டோம்" என்று ஓடி வந்துவிட்டார்கள். அதே போல‌,பார்ப்பன மலத்தை மட்டுமே பார்த்துப்பார்த்து நக்கும் ஜெயகாந்தன் என்கிற நாய் (CPI க்கும் தான்) பார்ப்பன அடிவருடியாக மாறிய பிறகும் கூட சூடு சொரணையே இல்லாமல் அந்த அசிங்கத்தை மேடையேற்றி மாலை போட்டு வணங்கினார்கள்.கடைசியில் அது சங்கரமடத்தில் போய் சரண‌டைந்து தான் கழிந்த கழிவை இவர்கள் முகத்திலேயே விசிரியடித்தது.அவ்வாறே RSS காரன் ஜெயமோகனை அழைத்தும் கொளரவித்து மேடையேற்றினார்கள். அதற்கு நன்றிக்கடனாக அந்த சைக்கோ 'பின் தொடரும் நிழலின் குரல்' என்கிற செருப்பைக்கழட்டியே அடித்தது, அப்போதுங்கூட அதை பீ என்று உணரவில்லை இந்த தயிர்சாதங்கள்.மாறாக அந்த மலத்தை தமுஎச கந்தர்வன் தான் வெளியிட்டார்.அதற்கும் பிறகு வழக்கம் போல‌ தாமதமாகத்தான் காம்ரேடுகளுக்கு ஜெயமோகன் RSS பயங்கரவாதி எண்பது புரிந்தது,அதுவும் தானாக அறிந்துகொண்டதல்ல வெளியிலிருந்து ஜெயமோகனை பிறர் அம்பலப்படுத்திய‌தால் சுதாரித்துக்கொண்டவர்கள் உடனே ‘ஜெயமோகனை நம்பி நாங்கள் ஏமாந்துவிட்டோம்’ என்றார்கள். 'அவருடைய ஆசை வார்த்தைகளில் மயங்கி விட்டோம் ஆனால் இப்போது விழித்துக்கொண்டோம்' என்று இதே வார்த்தைகளில் அப்படியே எழுதினார் மேலாண்மை பொன்னுச்சாமி என்கிற‌ மொக்கைச்சாமி . இதெல்லாம் எப்படிப்பட்ட பதில்கள் தோழர்களே?அப்படியானால் மன்மோகன் சிங் நேரடியாக புக்ஷ் காலை நக்கும் போது தான் அது ஒரு அடிமை விலங்கு என்பதையும் நம்புவார்களா ? அப்போது தான் ஆதரவையும் வாபஸ் வாங்குவார்களா? அப்போதுங் கூட இதே போல ஆதரவை மட்டும் வாபஸ் வாங்கிவிட்டு தன்னுடைய அத்தனை தவறுகளையும் மறைத்துக்கொண்டு 'மன்மோகன் இப்படியெல்லாம் செய்வார் என்று நாங்கள் நினைக்கவேயில்லை,அவரை நம்பி ஏமாந்துவிட்டோம்'என்று முடித்துக்கொள்வார்கள். இவர்கள் ஏமாறுவது இருக்க‌ட்டும்.இவர்கள் பெரிய ஏமாளிகள் என்பதை நாம் நம்பிவிடுவோம்.ஆனால் இவ‌ர்க‌ளை ந‌ம்பி ஏமாந்த லட்ச‌க்கணக்கான தோழர்களுக்கு என்ன பதில்?கட்சி சொன்னதால் ஜெயமோகனை ஆதரவு சக்தி என்று நம்பிய தோழர்களுக்கு என்ன‌ பதில் சொல்வார்கள்?கேள்வி கேட்ப‌வ‌னை ப‌ய‌ங்க‌ர‌வாதி என்று சொல்வார்க‌ள்!இவன் கூட கூட்டணி வைக்கலாம், அவன் கூட கூட்டணி வைக்கலாம், இவனை நம்பலாம் அவன நம்பலாம்ன்னு ஒவ்வொருத்தன் பின்னாடியும் போறதுக்கு ஒனக்கு ஏதாவது தத்துவம் இருக்காப்பாங்கிறது தான் கேட்க வர்ற கேள்வி. அதுக்கு எதாவது பதிலிருக்கா?தற்போது ஆதரித்துக்கொண்டிருக்கும் கொள்ளைகும்பல் ஊரை கூறு ரெண்டு ரூவாய்ன்னு விக்கிறானே அவனை எந்தள‌வுக்கு நம்பி ஆதரிக்கிறார்கள்? அதாவது ஜெயலலிதாவை நம்பிய‌ அளவுக்கா,ஜெயமோகனை நம்பிய‌ அளவுக்கா?என்ன‌ நம்பிக்கையில் அந்த‌ கைக்கூலிகள் ஆட்சி செய்ய அனுமதித்துக்கொண்டிருக்கிறார்கள்? இதற்கெல்லாம் ஏதாவது பதிலிருக்கிறதா CPM டம் ? கேவலம், பச்சையாக பார்ப்பன விசத்தை கக்கும் ஒரு எழுத்தாளனையே மதிப்பிட லாயக்கற்றவர்கள் இந்த நாட்டை எப்படி மதிப்பிட முடியும்? நாட்டை காட்டிக்கொடுக்கும் கைக்கூலிகளிடமிருந்து மக்களை எப்படி காக்க முடியும்?அனைத்து கேள்விகளையும் இனி CPM தோழர்கள் தான்‌ கேட்க வேண்டும்.ஏனென்றால் ஒன்று.வெளியிலிருந்து கேள்வி கேட்கும் நாமெல்லாம் பயங்கரவாதிகள். இன்னொன்று. அவ‌ர்க‌ள் தான் அந்த‌ கட்சி சொல்வ‌தையெல்லாம் ந‌ம்புகிறார்க‌ள்.அதை ந‌ம்பி பின்னாலும் செல்கிறார்க‌ள்.இது வெறும‌னே ந‌ம்பினோம் ஆத‌ரித்தோம் என்று முடித்துக்கொள்கிற‌ பிரச்சணை அல்ல தோழ‌ர்களே, ஏனெனில் நாளை எல்லாம் நடந்து முடிந்த பிறகு,கட்சி சொன்னதால் தான் நம்பினோம்,கட்சியை நம்பினதால் தான் கட்சி முட்டு கொடுத்த கட்சியையும் நம்பினோம் என்று ப‌தில் கூற‌ முடியாது,கூறவும் கூடாது. எனவே CPM காங்கிர‌சை தாங்கிப்பிடிக்கிற‌து என்றால்,முட்டுக்கொடுக்கிறது என்றால் அதன் பொருள் அந்த கட்சியின் தோழர்களாகிய நீங்கள் காங்கிரசை ஆதரிக்கிறீர்கள் என்பது தான். கோடிக்கணக்கான மக்களை மரணக்குழிக்குள் தள்ளத்துடிக்கும் நாசகார‌ கொள்கைகளை அமல்படுத்தி வரும் காங்கிரசை CPM ஆதரிக்கிறது என்றால் எந்த நம்பிக்கையில், என்ன‌ துனிவில் ஆதரிக்கிறது? பதில் மிகவும் சுலபமானது.உங்கள் கட்சியை நீங்கள் நம்புகிறீர்கள்,உங்கள் சார்பாக CPM காங்கிரசை நம்புகிறது எனவே ஆதரிக்கிறது. ஆக‌மொத்தத்தில் CPM செய்து வரும் அனைத்து தவறுகளுக்குமான பொறுப்பு உங்கள் தலையில் வ‌ந்து விடிய‌‌ப்போகிற‌து. இது ஒரு எச்ச‌ரிக்கை தோழ‌ர்க‌ளே!CPM ஆதரவில் ஆட்சி நடத்தும் காங்கிரசு அமல்ப‌டுத்திவரும் 'மறுகலனியாதிக்க' கொள்கைகளின் விளைவாக லட்சக்கணக்கான தற்கொலைகள்,விவ‌சாய‌த்துறை திட்ட‌மிட்டு அழிக்க‌ப்ப‌டுகிற‌து,கோடிக்கணக்கான மக்கள் நாளும் கொடிய பசி பஞ்சத்தால் வாடுகிறார்கள்,பன்னாட்டு முதலாளிகளும் தரகு முதலாளிளும் கொழுத்துத்திரிகிறார்கள்,சிறு தொழில்கள் மொத்தம் மொத்தமாக கொன்று புதைக்கப்படுகிறது, பொதுத்துறைகள் அடிமாட்டு விலைக்கு ஏலம் விடப்படுகின்றன,மக்களின் உயிரோடு வணிகச்சூதாடிகள் விளையாட்டு நடத்துகிறார்கள்,விலைவாசி நடுத்தரவர்க்கத்தையே வாழ்வின் விளிம்பிற்குத் தள்ளி விடுகிறது,மொத்ததில் நாடும் CPM ஆதரவோடு சுடுகாடாகி வருகிறது.இந்த மறுகாலனியாக்க படுகொலையில் இவர்களுடைய பங்கு தான் முக்கியமானது,அதாவது இதை ஒரு சினிமாவோடு ஒப்பிட்டால் இவர்கள் தான் டைரக்டர். ஏனென்றால் இவர்கள் தானே காங்கிரசை அப்படியே ஆட்டிப்படைப்பதாக பத்திரிகைகள் கூறுகின்றன.அதை நினைத்து இவர்களுக்கு வெட்கங்கெட்ட சந்தோசம் வேற‌.பாராளுமன்ற ஊளை முட்டைகுஞ்சி பொறிக்குமா?CPM விழுந்து விழுந்து கும்பிடு போடும் பாரளுமன்ற புரட்சிக்கு ஆப்படிக்கும் ஒரு விசயமும் இருக்கு தோழர்களே,கேட்டுட்டு ஓடிப்போயி உடனே 'இதெல்லாம் உண்மையா தோழான்னு' கட்சியில கேட்டுறாதீங்க‌ அப்புறம் உங்களையும் 'நக்சலைட்'ன்னு முத்திரை குத்தி வெளியே அனுப்பிடுவாங்க. ஒன்ன மட்டும் புரிஞ்சிக்கங்க உங்கள் கட்சியிடம் கேள்விகளை நேராடியாக‌ கேட்டு பதிலைப் பெறவே முடியாது.கேள்வி கேட்காமலே தான் பதிலைப் பெற முயற்சிக்க‌ வேண்டும், அதாவது அவர்களின் பல்வேறு மழுப்பல்கள், வாக்குமூலங்கள், அறிக்கைகள், ந‌டவடிக்கைகளிலிருந்து தான் அவற்றை புரிந்துகொள்ள வேண்டும்.ஒட்டுமொத்த‌ ஓட்டுப்பொறுக்கிகளின் தலைமைத்திருக்கோவிலான‌ பாராளுமன்றத்தின் குடுமி யார் கையில் இருக்கிறது தெரியுமா தோழர்களே? நம் குடியை கெடுக்கும் அமெரிக்கா கையில் தான் இருக்கு! நம்மூர் பாப்பான் எப்படி நம்மள‌ ஒரு லிமிட்டுக்கு மேல கோவிலுக்குள்ள விடமாட்டேங்கிறானோ அதே போல அமெரிக்கா தலைமையிலான W.T.O , WORLD BANK, I.M.F ஐ மீறி அங்கே எதையும் செய்ய முடியாது.அவனுடைய‌ கட்டுப்பாட்டில் தான் இந்த பன்றித்தொழுவம் பராமரிக்கப்பட்டு வருகிறது. உதாரணத்திற்கு ஒன்று பா.சி போடுகிறாரே பட்ஜெட் அதை என்ன பிரகாக்ஷ் காரத்திடமும்,யெச்சூரியிடமும் காட்டிய‌ பிறகா பாராளுமன்றத்தில் அறிவிக்கிறார்? இல்லையே.பிறகு யாரிடம் காட்டுகிறார்? வேறு யாரிடம் I.M.F யிடம் தான்! பட்ஜெட்டை‌ பார்த்து அவன் குட் மார்க் போட்டு OKன்னு சொன்ன பிறகு தான் ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டும் நாட்டுக்கே அறிவிக்கப்படுகிறது.பாராளுமன்றத்தில் அணைத்தும் அவனுடைய ஆனைப்படி தான் நடக்கிறது.W.B, W.T.O வை மீறி அங்கே எந்த பன்னியும் எதுவும் செய்ய முடியாது. ஏகாதிபத்திய நாடுகளின் விருப்பத்திற்கு மாறாக அங்கே நடந்து கொண்டால் என்ன நடக்கும் என்பதற்கு பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த மணிசங்கர் தான் நல்ல‌ உதாரணம்.தூக்கிவீசிட்டானுங்க வீசி. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா 1994 லேயே நடந்துவிட்டது.2000 பக்கங்களை கொண்ட காட் ஒப்பந்தம் என்கிற அடிமைச்சாசனத்தின் ஒருவரியை கூட படிக்காமல் அனைத்து ஓட்டுப்பொறுக்கிகளும் அதன் அணைத்து அம்சங்களையும் அப்படியே ஏற்றுக்கொண்டு ஒரே மனதாக நிறைவேற்றினார்களே அப்போது எங்கே போனார்கள் இந்த‌ புரட்சியாளர்கள்? அன்றைக்கே ஏன் இவர்களால் அந்த ஒப்பந்தத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை? அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அனைத்து பிரச்சணைகளுக்கும் காரணமான‌ காட் ஒப்பந்தம் நிறைவேறும் வரை காரியக்கிறுக்கன் கனக்கா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்து விட்டு, நாட்டை விற்க கைக்கூலிகளோடு துணையும் போய்விட்டு இப்ப‌ வந்து நான் அதை எதிர்க்கிறேன்,இதை எதிர்க்கிறேன் என்றால் கேக்கிறவனெலாம் கேனைப்ப‌யன்ற நினைப்புத்தானே CPM க்கு? இது போன்ற பச்சையான‌ திருட்டுத்தனங்கள், பொய் பித்தலாட்டங்களையெல்லாம் கையும் களவுமாக பிடித்து கேள்வி கேட்டாலும் கேட்பது அருந்ததிராயா அற்பப்புழு ஜெயலலிதாவா என்று கூட‌ பாராமல் ஒரே வரியில் தீவிரவாதி,மாவோயிஸ்ட் என்று கூறி வெட்கமே இல்லாமல் வாயை பொத்திக் கொள்கிறார்கள் இந்த யோக்கிய சிகாமணிகள்.இதெல்லாம் யாரை ஏமாற்ற நடத்தும் நாடகங்கள் என்பது இப்போதாவது உங்களுக்கு புரிந்திருக்கும் தோழர்களே.இது போன்ற‌ கேள்விகளை அறிவுள்ள அனைவருமே தான் கேட்பார்கள்.மூளையுள்ள யாருக்குமே இப்படித் தான் கேள்விகள் எழும்.அவ்வளவு ஏன் இருக்க வேண்டிய இடத்தில் அந்த உறுப்பே இல்லாமல் தமிழ் நாட்டில் ஒரு ஜென்மம் இருக்கிறதே விஜயகாந்த் என்று, அது CPM ஐ பார்த்து கேள்வி கேட்கிறது என்றால் என்னவென்று எழுதுவது.CPM த‌லைவ‌ர்க‌ளை கொஞ்ச‌ம் ரோட்டில் இற‌ங்கி வந்து பார்க்கச்சொல்லுங்கள் தோழர்களே.காரித்துப்புகிறார்கள் மக்கள்.ஆட்சியிலிருக்கும் நீயே எதுக்குடா தெருவுல நின்னு போராட்டமும் நடத்துறன்னு தினமணிக்காரன் கேள்வி கேட்கிறான்,கேலிச்சித்திரம் வரைகிறான். கண்டகண்டவனெல்லாம்,நேத்து மொளைச்ச காளானெல்லாம் கூட ‘கம்யூனிஸ்ட் கட்சியை’ பார்த்து கேள்வி கேட்குது.காங்கிரஸ்காரன் நாக்கப்புடுங்கிக்கிற மாதிரி வெளியப்போறதுன்னா போயித்தொலைங்களேன்டா ஏன் இன்னும் இருந்து எங்க‌ உயிர வாங்குறீங்கன்னே கேட்டுட்டான்.அப்புறமும் கூட‌ வெக்கமே இல்லாம பல்லிளிக்கிறவன்கிட்ட‌ என்ன பன்னுறது ?நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும்.ஒன்று இவற்றுக்கெல்லாம் கட்சியின் பதில் என்ன என்று கேட்டுத் தெளிவு பெற வேண்டும். அல்லது அதற்கும் கூட அவசியம் இல்லையென்றால் வெளியேறவேண்டும்.செய்வது தவறு என்பதை அறியாமல் செய்ப‌வ‌ர்க‌ளை ம‌ண்னிக்க‌லாம் ஆனால் இருப்ப‌து சாக்க‌டை என்று தெரிந்தும் ஊதுவ‌ர்த்தி கொளுத்திக்கொண்டிருப்பவர்களை என்ன‌ செய்வ‌து? அன்று CPM லிருந்து சிந்தித்துகேள்வி கேட்டதால் தான் எங்க‌ள் முன்னோர்க‌ள் ‘ந‌க்ச‌ல்பாரி’க‌ளானார்க‌ள்.இன்று CPM ல் இருக்கும் நீங்க‌ளும் சிந்தியுங்க‌ள் புரட்சியாளர்களாக மாறுங்கள்..ஏன் CPM ஐயே திட்டுகிறார்க‌ள் என்று யோசிப்பதை விட்டுவிட்டு அந்த‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ள் ச‌ரியா த‌வறா என்கிற கண்ணோட்டத்தில் யோசியுங்க‌ள், முடிவெடுங்க‌ள்.ந‌க்ச‌லைட்டுகள்,தீவிர‌வாதிக‌ள் என்று கூறி உங்க‌ளை ப‌ய‌முறுத்துகிறார்க‌ளே அவ‌ர்க‌ளிட‌ம் கேட்டுப்பாருங்க‌ள் தீவிர‌வாத‌ம் என்றால் என்ன‌ என்று, இந்த மறுகாலனியாதிக்க காலகட்டத்தில் மக்களுக்காக நிற்கும் அனைவரையுமே இந்த கொடுங்கோண்மை அரசு எந்திரம் தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் தான் அடையாளப்படுத்துகிறது.அதே போல பயங்கரவாத அரசால் மக்கள் கொன்று குவிக்கப்படும் பொழுது கோழைத்தனமாக‌ அமைதிகாக்கும் துரோகிகளையும் இந்த காலகட்டம் அடையாள‌ப்படுத்தும்.நாங்கள் தீவிரவாதிகள்,காட்டில் இருப்பவர்கள், ஆயுதப்போராட்டம் நடத்துபவர்கள் என்று ஒரு பொய்யை CPM பல ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வருகிறது.நாங்கள் எந்த‌‌ காட்டில் இருக்கிறோம்? த‌ற்போது ஆயுதப்போராட்டமா நடத்திக்கொண்டிருக்கிறோம்?எமது அமைப்புகளும்,ப‌த்திரிகைகளும் த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌வையா?தமிழ் நாட்டில் எந்த அமைப்பும் சொல்லாத பொய்கள் இவை. இவை அனைத்தும் CPM மட்டுமே சொல்லி வருகிற‌ ப‌ச்சை பொய்க‌ள்.ஏன் இவ்வாறு அப்ப‌ட்ட‌மாக‌ பொய் பேசுகிறார்க‌ள்?மேற்கூறிய அனைத்தும் பொய்கள் என்பது ஒரு புறம் இருக்க அவை அனைத்தும் CPMன் விருப்பமாக இருக்கிறது.அதாவது எம்மை தீவிரவாதிகளாக உங்களிடம் அடையாளப்படுத்த வேண்டும் என்பதும்,காட்டில் சுற்றியலைய வேண்டும்என்பதும் மொத்ததில் நாங்கள் ஊருக்குள் இருக்கக்கூடாது என்பதும்CPMன் ஆசையாக இருக்கிறது.கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க திரானியற்ற இந்த‌ கோழைகள் தமது மூஞ்சி கிழிந்து தொங்கி விடாமலிருக்க எம்மை காட்டில் சுற்றுபவர்களாக சித்தரிக்கிறார்கள். CPM இவ்வாறு சொல்வதெல்லம் உண்மையா இல்லையா என்று கேளுங்கள் தோழர்களே. இன்னொரு கட்சியை இப்படி ஆளும் வர்க்க அடியாளைப்போல‌ முத்திரை குத்துபவன் யாராக இருக்க முடியும் என்ப‌தை சிந்தித்து பாருங்க‌ள்.CPM க‌ட்சி எப்ப‌டிப்ப‌ட்ட‌து என்ப‌து புரியும்.ஒரு க‌ம்யூனிஸ்ட் ஆயுத‌ம் ஏந்த‌ வேண்டுமா கூடாதா அப்ப‌டி ஏந்த‌வேண்டுமென்றால் ஏன் ஏந்த‌ வேண்டும் இதைப்ப‌ற்றி அவ‌ர்க‌ளின் க‌ருத்து என்ன‌ என்று கேட்டுப்பாருங்க‌ள்.உல‌கிற்கே முத‌ல் சோச‌லிச‌ தீப‌த்தை ஏற்றிய‌ ர‌சிய‌ ம‌க்க‌ள் ஆயுத‌ம் ஏந்த‌வில்லையா அதைப்ப‌ற்றிப்ப‌ட‌ர்ந்த‌ சீன‌ப்புர‌ட்சியிலும் ம‌க்க‌ள் ஆயுத‌ம் ஏந்த‌வில்லையா? அவ‌ர்க‌ளும்தீவிர‌வாதிக‌ளோ ? துப்பாக்கி குழாயிலிருந்து தான் அர‌சிய‌ல‌திகார‌ம் பிற‌க்கிற‌து என்று கூறினாரே மாவோ அவ‌ரும் தீவிர‌வாதியா? ச‌ரி ஆயுத‌த்தை ஏந்தித்தான் ஆக‌ வேண்டுமென்ற‌ல் புத்த‌தேவும் பிர‌காக்ஷ்கார‌த்தும் அத்வானியையும் ம‌ன்மோக‌னையும் சுட்டுத்த‌ள்ளவா துப்பாக்கியை ஏந்துவார்கள்‌? ஆயுத‌ம் தான் எதிரியின் முடிவுரையையும் உழைக்கும் மக்களின் முன்னுரையையும் எழுதும் எழுதுகோள்.அது இல்லாம‌ல் அன்று பாரிசிலிருந்து இன்று காத்மான்டு வ‌ரை ந‌ம‌து ம‌க்க‌ள் அதிகார‌க்கலை வ‌டிக்க‌ப்ப‌ட்டிருக்க‌ முடியாது.எதிரி காகித‌த்தில் விச‌த்தைக் க‌க்கும் போது ந‌ம‌து எழுதுகோள் முனை காகித‌த்தில் குத்திக்கிழிக்கிற‌து.ஆனால் அவனுடைய ஆயுதம் நம்முடைய குருதியை கேட்டு நிற்கும் பொழுது நம்முடைய ஆயுதமும் வெறிகொண்டு குருதி குடிக்கும்.முதலாளித்துவ அமைப்பு முறையின் எதிர்வினையான நாம் தற்போது எந்த ஆயுதத்தை கையிலெடுக்க வேண்டும் என்பதை ந‌ம் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்.அதன் படி நாங்கள் காடுகளிலும் இல்லை மலைகளிலும் இல்லை என்பதை நீங்கள் அருகில் வரும் போது தான் அறிய முடியும்.ஒன்றை ம‌ட்டும் ம‌ற‌ந்துவிடாதீர்க‌ள் தோழர்களே.உண்மை,நேர்மை ஆகிய‌வற்றுக்காக ந‌ம் உட‌லிலிருந்து உயிர் பிரிந்து போக‌லாம் ஆனால் மான‌மும்,வீர‌மும் ந‌ம்மோடு ஒன்று க‌ல‌ந்து விடும்.புரட்சியாளர்கள் மட்டுமே மக்களின் நினைவுகளில் என்றும் மங்கிமறையாத நினைவுகளோடு வாழ்வார்கள்.துரோகிகள் இறந்த பின்னும் கொல்லப்படுவார்கள்.நாம் இருக்க‌வேண்டிய‌ இட‌ம் CPM என்கிற‌ குறுகிய இருட்டறையா அல்லது எல்லையற்று அலை அலையாய் ஒளி படர்ந்து பரவும் விரிந்த‌ வானும் புல்வெளியும் கொண்ட‌ வெட்ட‌வெளியா ‌என்ப‌தை முடிவெடுங்கள்.
Posted by சூரியன் at 10:33 PM

2 comments:
ஏகலைவன் said...
தோழர் சூரியன் அவர்களே!மிகவும் சிறப்பான பதிவு தோழர் பாராட்டுக்கள்!சிபிஎம் கட்சியில் உள்ள நேர்மையான அணிகளுக்கு இது உண்மையிலேயே பயனளிக்கக் கூடிய பதிவு. நானும் என்னோடு தொடர்புடைய சிபிஎம் தோழர்களுக்கு உங்களது இந்தப் பதிவை அறிமுகப் படுத்தியிருக்கிறேன்.விவாதங்களை எதிர்பார்க்கலாம்.தோழமையுடன்,ஏகலைவன்.
June 19, 2008 7:32 AM
சூரியன் said...
தோழரே,அனைத்து பதிவுகளையும் சிறப்பாக இருக்கிறது என்கிறீர்கள்,ஏதாவது விமர்சனங்கள் இருப்பின் அதை சொல்லுங்கள் இல்லாவிட்டால் CPM காரர்கள் கோவித்துக்கொள்ளக்கூடும் :)

Tuesday, June 3, 2008

கீழே உள்ள பின்னூட்டம் சந்திப்பின் பதிவில் இடப்பட்டுள்ளது, இதற்கு சந்திப்பு பதிலளிக்க வேண்டும்.

http://santhipu.blogspot.com/2008/05/blog-post_31.html@@@@////இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வரும் நாசகர பொருளாதார கொள்கைகள் மக்களிடையே கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி வருகின்றன. இதனை இடதுசாரிப்பாதையில் கொண்டு சென்றிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயல்கிறது.//இந்தியாவில் அமலப்படுத்தப்பட்டு வரும் நாசகர பொருளாதார கொள்கைகளை அப்படியே கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் அமல்படுத்துவது எந்த பாதை என்று விளக்கினால் சிறப்பாக இருக்கும்.மேலும் இந்த பொருளாதார கொள்கைகளினால் ஏற்படும் மக்களின் வெறுப்பை இடது சாரி பாதையில் திருப்புவதைத்தான் நந்திகிராம், சிங்கூரில் செய்தீர்களா என்பதையும் விளக்க வேண்டும்.பஞ்சாயத்து தேர்தலில் தோல்வியடைந்த பின்பும் கூட அதே நாசகர பொருளாதார கொள்கைகளை அமல்படுத்துவதை நாங்கள் செய்வோம் என்று CPM தலைவர்கள் சொல்லி வருவதுதான் இடதுசாரி பாதையா என்றும் விளக்க வேண்டும்.@@@@

Friday, May 23, 2008

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா சந்திப்பின் சாயம் வெளுத்தால் தமிழ்மணி

நம் தேசத்தை அச்சுறுத்தும் இருபெரும் அபாயங்களான மறுகாலணியாதிக் கத்தையும் பார்ப்பன பயங்கரவாதத்தையும் எந்தவிதமான சமரசமுமின்றி எதிர்த்து களத்தில் நிற்பது எமது அமைப்புதான்.குறிப்பாக இந்துவெறி பாசிச நடவடிக்கைகள், எமது அமைப்பின் தோழர்களால் தொடர்ந்து மக்கள் மத்தியில் திரைகிழிக்கப்பட்டு, தமிழகத்தில் சங்கபரிவார வளர்ச்சிக்குப் பெருந்தடையாக நிற்கிறது.இவ்வாறான எமது நடவடிக்கைகளை களத்தில் எதிர்கொள்ளத் திராணியற்ற இந்துவெறி பாசிஸ்டுகளும், ஏகாதிபத்திய அடிவருடிகளும் நம்மை இழிவுபடுத்தும் நோக்கில், கம்யூனிசத்தை அவதூறு செய்து வருகின்றனர்.இணையத்தில் வெகுவாக ஆக்கிரமித்திருந்த இந்துவெறிக் கும்பலின் மிச்ச சொச்சங்களான, அரவிந்தன் நீலகண்டன், அதியமான், ஜடாயு போன்ற அம்பிகளும், அமெரிக்க பூட்ஸ் நக்கி 'டாலர்'செல்வனும் கூட்டாக இணைந்து தமிழ்மணி என்ற பெயருக்குள் ஒளிந்துகொண்டு இங்கே கம்யூனிச அவதூறுகளைப் பரப்பிவருகின்றனர்.கம்யூனிஸ்டுகளையும் திராவிட இயக்கத்தோழர்களையும் மோதவிடும் நோக்கில் பலமுறை இவர்கள் எழுதிவந்தனர். இவர்களின் இத்தகைய சதிவேலைகளை சம்பூகன் என்ற தோழர், அவர்களின் வார்த்தைகளிலிருந்தே ஆதாரங்களை எடுத்து, இது மேற்கண்ட பார்ப்பனக் கும்பலின் சதிவேலைதான் என்று தெளிவாக அம்பலப்படுத்திவிட்டார்.அதற்கு பதில் சொல்லப் பயந்து, பதுங்கி இணையத்தின் பக்கமே தலைகாட்டாமல் இருந்த இந்த அம்பிகள், நேபாள மக்கள் எழுச்சியின் விளைவாக நடைபெற்ற தேர்தலில் மாவோயிஸ்டுகள் பெரும்பான்மைபெற்று, அங்கிருந்த இந்துராச்சியத்தை அடித்து வீழ்த்தியதன் விளைவை பொறுக்கமாட்டாமல், தமது அவதூறு கருத்துக்களை மீண்டும் அள்ளித் தெளிக்க இங்கே ப்ரசன்னமாகியிருக்கின்றனர்.அவர்கள் தம்மை பொதுவாக கம்யூனிச எதிரி என்று அறிவித்துக் கொண்டு செயல்பட்டாலும், அவர்களுடைய நிரந்தர இலக்கு நாம் தான் என்பது அவர்களுடைய தொடர் நடவடிக்கைகளில் தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில், முதலில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக திராவிட இயக்கங்களை ஆதரித்த இவர்கள், இப்போது போலிகம்யூனிஸ்டு முகாமைச் சேர்ந்த சந்திப்புடன் கரம் கோர்த்திருக்கிறார்கள். மார்க்ஸ் முதல் மாவோ வரை அனைத்து கம்யூனிச ஆசான்களையும் வசைமாறி பொழிந்து இழிவுபடுத்தியதுமில்லாமல், நமது தோழர்களையும் அமைப்பையும் வெளிப்படையாக கொச்சைப்படுத்திவந்த இவர்களுக்கு, சி.பி.எம். என்ற போலி கம்யூனிஸ்டு கட்சி மிகவும் உகந்ததாம். அக்கட்சியின் செயல்பாடுகள் இவர்களை வெகுவாகக் கவருகின்றனவாம். இதிலிருந்தே இவர்கள் எந்த அடிப்படையிலானவர்கள் என்பது தெளிவாக விளங்கும். போலிகளின் அடையாளத்தை இதைவிட யாரும் தெளிவாக அம்பலப்படுத்திவிட முடியாது. இவர்கள் கரம் கோர்த்து செயல்படுவதுதான், நாமும் நம்முடைய பாதையும் சரியானது என்பதை உரக்கச் சொல்லும் சான்றுகள். இவ்வளவு சொல்லியும், "அப்படியெல்லாம் கிடையாது, எமது சந்திப்பு அவர்களும், அவர் சார்ந்த இயக்கமும்! சொக்கத் தங்கம்" என்று வாதிடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியானால் உம்முடைய சொக்கத் தங்கம் இன்றுவரை தமிழ்மணியின் தொடர்ச்சியான கம்யூனிச அவதூறுகளுக்கு ஒரு எழுத்தில் கூட பதில் சொல்லாதது ஏன்?சி.பி.எம்.மை ஆதரித்து இரண்டு வார்த்தை சொல்லிவிட்டு, கம்யூனிச ஆசான்களை இரண்டு பக்கத்துக்கு வசைபாடினால் நம்ம சந்திப்புக்கும் அவருடைய கட்சிக்கும் எதுவுமே உரைக்காதா?இதுவரை எமது பல கேள்விகளுக்கு பதில் சொல்லாத சந்திப்புக்கு இன்னுமொரு கேள்வியை இதன் வாயிலாக வைக்கலாமென்று நினைக்கிறேன்."நன்றாக உபசரித்து விதம்விதமான பலகாரங்களுடன் விருந்து பரிமாறிவிட்டு இலையின் ஓரத்தில் ஒருதுளி பீயை வெச்சா சாப்புடுவியா?" என்று கிராமத்தில் சொரனையை வலியுறுத்துகின்ற ஒரு சொல்லாடல் உண்டு. நான் அதுபோல சந்திப்பைக் கேட்கமாட்டேன். இந்த தமிழ்மணி கும்பல் நம்ம சந்திப்புக்கு விருந்து உபசரிக்கும் முறை இதற்கு நேரெதிரானது அல்லவா?அதனால், "இலை முழுவதும் பீயையும் எருமைச் சாணியையும் வைத்துவிட்டு அவற்றுக் கிடையில் ஒரு துண்டு (சி.பி.எம். பாராட்டு என்ற) திருநெல்வேலி அல்வாவை வைத்தால், அதை ஏற்றுக்கொள்வீரா???" சந்திப்பு அவர்களே, இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்வீர்கள் என்றுகூட நான் எதிர்பார்க்கவில்லை. மாறாக தமிழ்மணி என்கிற பார்ப்பனமணிக்கு நீர் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்பதை மட்டும் பொறுத்திருந்து பார்க்கிறோம். இதற்கு மேலும் உமது சொரனையற்ற தன்மை தொடருமேயானால் என்ன செய்வது என்பதை வாசகரின் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

ஏகலைவன்.