அடிமைத்தனத்தை வெறுக்கும்
அடிமையிடம் தான் சுயமரியாதை இருக்கும்,விடுதலை வேட்கையும் இருக்கும் .மன்மோகன் சிங் போன்ற மாமாப்பயல்களுக்கு உடலில் எந்த உணர்ச்சியுமே இல்லை என்பதை நாடே அறிந்து வருகிறது.எஜமானின் சாட்டை மீது மாளாக்காதல் கொண்டிருக்கும் இந்த அடிமைக்கு ஒவ்வொருமுறையும் ஆண்டையிடமிருந்து உத்தரவுகள் பிறக்கும் போது தான் உயிரே வருகிறது. அடிமையாக அல்ல,அடிமையிலும் கேடுகெட்ட அடிமையாக அமெரிக்க ஆண்டானுக்கு தொன்டூழியம் செய்வதற்கென்றே பிறப்பெடுத்துள்ள இந்த பிணத்திடம் போயி...
சுதந்திரம் என்கிற வார்த்தை எப்படி இனிக்கும் தெரியுமா?
இதோ இப்படி சொல்லுங்கள் ஐயா, சு-த-ந்-தி-ர-ம், சுதந்திரம் என்று பாடம் நடத்திக்கொண்டிருப்பவனை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
மனநிலை பிறழ வாய்ப்பே இல்லாத மன்மோகனுக்கும் அதை ஒத்த மற்ற பிறவிகளுக்கும் நிச்சயம் அப்படிப்பட்ட ஒருவன் கசப்பான எதிரி தான் ஆனால் நம்மைப்போன்ற மற்றவர்களுக்கு இது போன்ற ஒருவனை மறை கழண்ட மங்குனி என்று புரிந்து கொள்வது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல.
இப்படி ஒருத்தன் ரெண்டு பேர் இல்ல ஒரு கட்சியே மன்மோகனை அடிமைத்தளையிலிருந்து மீட்க அதாவது மன்மோகனுக்கு எதிராக கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது,வெளியே வந்த பிறகு அந்த முயற்சியின் தீவிரம் குறைந்தாலும் தற்போதும் அதே நோக்கத்தோடு தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் அவர்களின் தற்போதைய பேச்சுக்கள் காட்டுகிறது. நான்காண்டுகளாக இடதுசாரிகளின் வதைகளை எல்லாம் தாங்கிக்கொண்ட மன்மோகன் தனது விலங்குகள் உறுதியாகத்தான் பிணைக்கப்படுள்ளன என்பதையும்,தனது சேவைக்காலம் வெற்றியின் மூலம் நீட்டிக்கப்பட்டுவிட்டது என்பதையும் அறிந்துகொண்ட மறுகணம் ஒன்றைச்சொன்னார் 'இடதுசாரிகள் என்னை அடிமை போல நடத்த முயன்றார்கள்,அவர்களிடம் நான் அடிமையாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள்' என்று வேதனையோடு தனது குமுறலை வெளியிட்டார்.இவ்வளவு நடந்த பிறகு இப்போதும் கூட CPM வீரர்கள் விடுவதாயில்லை.. ஒரொன்னு ஒன்னு.. ஈரொன்னு ரெண்டு என்று வாய்ப்பாட்டை துவங்கிவிட்டார்கள். "அணுசக்தி ஒப்பந்தத்திற்கு யாரிடமும் ஆதரவு இல்லை எனவே காங்கிரசு இந்த ஒப்பந்தத்தை போடக்கூடாது" என்ற வாய்ப்பாட்டை பாடியுள்ளார்கள்.
'அடப்பாவி உங்களை திருத்தவே முடியாதாடா' என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
இவங்க கட்ச்சித்தலைவங்க எப்படி சொன்னதையே திரும்பத்திரும்பத் வாய்வலிக்காம சொல்றாய்ங்களோஅதே போலத்தான் இவங்க கட்சியில உள்ள திருவாளர் சந்திப்பிலிருந்து அத்தனை பேரும் சொன்னதையே பல வருசமா சொல்லிக்கிட்ருக்காய்ங்க. சந்திப்பே தேவலாம் போல, சந்திப்பை விட அப்பனுக்கு அப்பனைப் போல ஒரு ஆளு வந்திருக்கிறார் பேரு விடுதலையாம். நமது பிளாக்கில் ஒரே கமெண்டை திரும்பத்திரும்ப போட்டுக்கொண்டே இருக்கிறார்.ஒரு கட்டத்தில் எனக்கு இவர் புத்தி பேதலித்தவரோ என்று கூட தோன்றியது.ஹிஸ்டீரியா வந்தவனைப்போல ஒரு சில வார்த்தைகளை படபடப்போடு சலிக்காமல் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிகிறார். இந்த பிளாக்கில் அவருடைய முதல் ஹிஸ்டீரியா கமெண்ட் வந்து விழுந்த போது அதை நான் இயல்பாக எடுத்துக்கொண்டேன்.பிறகு அவரை விவாதிக்க அழைக்கலாம் என்று எண்ணி பொறுமையாகத்தான் அனுகினேன்.ஆனால் கட்சியின் மேலேயிருந்து கீழே வரை எல்லாமே ஒரொன்னு ஒன்னு.. பார்ட்டிகள் தான் என்பது ஏனோ பிறகு தான் புரிந்தது.
இவர் கமெண்டுகளில் பல வீர வசனங்களை பேசி சவடால் அடித்துள்ளார். ம.க.இ.க வை பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள காரப்பட்டுக்கு போய் பார்க்க வேண்டுமாம்.
உண்மை தான்,வரதராஜனையும்,யுப்பி காம்ரேடு யெச்சூரியையும் காரப்பட்டிற்குள் காலடி எடுத்து வைக்கச்சொல்லு நல்லா பிஞ்சு போன வெளக்குமாத்தாலேயே வரவேற்பு கிடைக்கும்.மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்!
மற்றவர்களை காரப்பட்டிற்கு போகச்சொல்வது இருக்கட்டும் இவர்களுடைய கட்சியிலிருந்து ஒரு நாலு பேரு போயி 'காரப்பட்டில் நடந்தது என்ன' என்று ஒரு விளக்க கூட்டம் போட்டு நடந்ததை விளக்க வேண்டியது தானே அதை செய்ய இந்த பேடிகளுக்கு துணிவில்லை மாறாக நடந்ததை அப்படியே திருப்பிப்போட்டு ஜெயலலிதாவை விட கேவலமாக பெய் பேசுகிறார்கள்.
பிறகு நக்சல்பரி இயக்கம் பற்றி தியாகுவின் ஒரு நேர்காணலை கமெண்டாக போட்டிருக்கிறார்.
தியாகு என்ன சொல்ல வருகிறார் அதை வைத்துக்கொண்டு இந்த மங்குனி என்ன செய்ய நினைக்கிறார் என்பது நமக்கு நன்றாக புரிகிறது. நக்சல்பரி இயக்கம் அதன் வரலாறு எதையும் அறியாத இந்த முட்டாள் நம்மை ஆயுதம் ஏந்தி போராடும் நக்சலிச அமைப்பு என்று கூறி தனிமைபடுத்த நினைக்கிறது.மாவோயிஸ்டுகளுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு என்றெல்லாம் தெரியாமல் இவர் இதை செய்யவில்லை அத்தனையும் தெரிந்து கொண்டு செய்யும் அயோக்கியத்தனம் இது.
கடைசியாக இவருடைய கமெண்டுகளை நாம் இருட்டடிப்பு செய்துவிட்டோமாம் அதை உடனே போடு என்று ஒரு கமெண்ட். ஆமாம் ஆமாம் இவருடைய கமெண்ட் வெளியானால் ம.க.இ.க அப்படியே மக்களிடம் அம்பலப்பட்டு போய்விடுமே அதனால் பயந்துபோனதால் தான் நாம் அதை இருட்டடிப்பு செய்ய முயற்சித்தோம் கடைசியில் விடுதலை விடாப்பிடியாக போராடியதால் எங்கே அம்பலப்பட்டுவிடுவோமோ என்று அஞ்சிப்போய் இப்போது வெளியிட்டுவிட்டோம்.அனைவரும் தயவு செய்து அந்த காமெடி பின்னூட்டங்களை மறக்காமல் வாசிக்கவும்.
கடைசியாகஉன்னைப் போன்றவர்களுக்கென்றே 'ஆன்டன் செக்கவ்' பல கதகளை எழுதியுள்ளார் அதில் ஒன்று " கூண்டில் அடைபட்ட மனிதர்" முதலில் அதையெல்லாம் படிச்சுட்டு வா அப்புறமா விடுதலையை பற்றியெல்லாம் பேசுவோம். அப்புறம் உன்னுடைய இது போன்ற லூசுத்தனமான கமெண்டுகளையெல்லாம் இனிமேல் இங்கே போடாதே அவை இனிமேல் பிரசுரிக்கப்படமாட்டாது.
Thursday, July 24, 2008
Subscribe to:
Posts (Atom)