Friday, May 23, 2008

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா சந்திப்பின் சாயம் வெளுத்தால் தமிழ்மணி

நம் தேசத்தை அச்சுறுத்தும் இருபெரும் அபாயங்களான மறுகாலணியாதிக் கத்தையும் பார்ப்பன பயங்கரவாதத்தையும் எந்தவிதமான சமரசமுமின்றி எதிர்த்து களத்தில் நிற்பது எமது அமைப்புதான்.குறிப்பாக இந்துவெறி பாசிச நடவடிக்கைகள், எமது அமைப்பின் தோழர்களால் தொடர்ந்து மக்கள் மத்தியில் திரைகிழிக்கப்பட்டு, தமிழகத்தில் சங்கபரிவார வளர்ச்சிக்குப் பெருந்தடையாக நிற்கிறது.இவ்வாறான எமது நடவடிக்கைகளை களத்தில் எதிர்கொள்ளத் திராணியற்ற இந்துவெறி பாசிஸ்டுகளும், ஏகாதிபத்திய அடிவருடிகளும் நம்மை இழிவுபடுத்தும் நோக்கில், கம்யூனிசத்தை அவதூறு செய்து வருகின்றனர்.இணையத்தில் வெகுவாக ஆக்கிரமித்திருந்த இந்துவெறிக் கும்பலின் மிச்ச சொச்சங்களான, அரவிந்தன் நீலகண்டன், அதியமான், ஜடாயு போன்ற அம்பிகளும், அமெரிக்க பூட்ஸ் நக்கி 'டாலர்'செல்வனும் கூட்டாக இணைந்து தமிழ்மணி என்ற பெயருக்குள் ஒளிந்துகொண்டு இங்கே கம்யூனிச அவதூறுகளைப் பரப்பிவருகின்றனர்.கம்யூனிஸ்டுகளையும் திராவிட இயக்கத்தோழர்களையும் மோதவிடும் நோக்கில் பலமுறை இவர்கள் எழுதிவந்தனர். இவர்களின் இத்தகைய சதிவேலைகளை சம்பூகன் என்ற தோழர், அவர்களின் வார்த்தைகளிலிருந்தே ஆதாரங்களை எடுத்து, இது மேற்கண்ட பார்ப்பனக் கும்பலின் சதிவேலைதான் என்று தெளிவாக அம்பலப்படுத்திவிட்டார்.அதற்கு பதில் சொல்லப் பயந்து, பதுங்கி இணையத்தின் பக்கமே தலைகாட்டாமல் இருந்த இந்த அம்பிகள், நேபாள மக்கள் எழுச்சியின் விளைவாக நடைபெற்ற தேர்தலில் மாவோயிஸ்டுகள் பெரும்பான்மைபெற்று, அங்கிருந்த இந்துராச்சியத்தை அடித்து வீழ்த்தியதன் விளைவை பொறுக்கமாட்டாமல், தமது அவதூறு கருத்துக்களை மீண்டும் அள்ளித் தெளிக்க இங்கே ப்ரசன்னமாகியிருக்கின்றனர்.அவர்கள் தம்மை பொதுவாக கம்யூனிச எதிரி என்று அறிவித்துக் கொண்டு செயல்பட்டாலும், அவர்களுடைய நிரந்தர இலக்கு நாம் தான் என்பது அவர்களுடைய தொடர் நடவடிக்கைகளில் தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில், முதலில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக திராவிட இயக்கங்களை ஆதரித்த இவர்கள், இப்போது போலிகம்யூனிஸ்டு முகாமைச் சேர்ந்த சந்திப்புடன் கரம் கோர்த்திருக்கிறார்கள். மார்க்ஸ் முதல் மாவோ வரை அனைத்து கம்யூனிச ஆசான்களையும் வசைமாறி பொழிந்து இழிவுபடுத்தியதுமில்லாமல், நமது தோழர்களையும் அமைப்பையும் வெளிப்படையாக கொச்சைப்படுத்திவந்த இவர்களுக்கு, சி.பி.எம். என்ற போலி கம்யூனிஸ்டு கட்சி மிகவும் உகந்ததாம். அக்கட்சியின் செயல்பாடுகள் இவர்களை வெகுவாகக் கவருகின்றனவாம். இதிலிருந்தே இவர்கள் எந்த அடிப்படையிலானவர்கள் என்பது தெளிவாக விளங்கும். போலிகளின் அடையாளத்தை இதைவிட யாரும் தெளிவாக அம்பலப்படுத்திவிட முடியாது. இவர்கள் கரம் கோர்த்து செயல்படுவதுதான், நாமும் நம்முடைய பாதையும் சரியானது என்பதை உரக்கச் சொல்லும் சான்றுகள். இவ்வளவு சொல்லியும், "அப்படியெல்லாம் கிடையாது, எமது சந்திப்பு அவர்களும், அவர் சார்ந்த இயக்கமும்! சொக்கத் தங்கம்" என்று வாதிடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியானால் உம்முடைய சொக்கத் தங்கம் இன்றுவரை தமிழ்மணியின் தொடர்ச்சியான கம்யூனிச அவதூறுகளுக்கு ஒரு எழுத்தில் கூட பதில் சொல்லாதது ஏன்?சி.பி.எம்.மை ஆதரித்து இரண்டு வார்த்தை சொல்லிவிட்டு, கம்யூனிச ஆசான்களை இரண்டு பக்கத்துக்கு வசைபாடினால் நம்ம சந்திப்புக்கும் அவருடைய கட்சிக்கும் எதுவுமே உரைக்காதா?இதுவரை எமது பல கேள்விகளுக்கு பதில் சொல்லாத சந்திப்புக்கு இன்னுமொரு கேள்வியை இதன் வாயிலாக வைக்கலாமென்று நினைக்கிறேன்."நன்றாக உபசரித்து விதம்விதமான பலகாரங்களுடன் விருந்து பரிமாறிவிட்டு இலையின் ஓரத்தில் ஒருதுளி பீயை வெச்சா சாப்புடுவியா?" என்று கிராமத்தில் சொரனையை வலியுறுத்துகின்ற ஒரு சொல்லாடல் உண்டு. நான் அதுபோல சந்திப்பைக் கேட்கமாட்டேன். இந்த தமிழ்மணி கும்பல் நம்ம சந்திப்புக்கு விருந்து உபசரிக்கும் முறை இதற்கு நேரெதிரானது அல்லவா?அதனால், "இலை முழுவதும் பீயையும் எருமைச் சாணியையும் வைத்துவிட்டு அவற்றுக் கிடையில் ஒரு துண்டு (சி.பி.எம். பாராட்டு என்ற) திருநெல்வேலி அல்வாவை வைத்தால், அதை ஏற்றுக்கொள்வீரா???" சந்திப்பு அவர்களே, இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்வீர்கள் என்றுகூட நான் எதிர்பார்க்கவில்லை. மாறாக தமிழ்மணி என்கிற பார்ப்பனமணிக்கு நீர் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்பதை மட்டும் பொறுத்திருந்து பார்க்கிறோம். இதற்கு மேலும் உமது சொரனையற்ற தன்மை தொடருமேயானால் என்ன செய்வது என்பதை வாசகரின் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

ஏகலைவன்.

Tuesday, May 6, 2008

மவுன சாமியார் சந்திப்பு.

தோழரே,
இதுவரை, குறைந்தது 6முறைகளுக்கும் மேலாக கீழ்கண்ட ஒரே விசயத்தை பதிலலிக்க வலியுறுத்தி நான் சந்திப்புக்கு ரிமைண்டர்கள் கொடுத்திருக்கிறேன். அந்த என்னுடைய பின்னூட்டங்களை பதிப்பிக்காதது மட்டுமின்றி, கட்டபொம்மன் அவர்களின் கேள்விக்கு இதுவரை சந்திப்பு பதிலலிக்கவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தோழமையுடன்,
ஏகலைவன்

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...எமெர்ஜென்சியிலே போராடிக்கிட்டுக் கிடந்தது எல்லாம் சரிதான். உங்க தலைவர் பி.ராமமூர்த்தியை மட்டும் எமெர்ஜென்சி நெருங்கவே இல்லையே அது ஏன்? திடீர் திடீரென்று பத்திரகாளி இந்திராவின் உணவு மேசையில் பி.ஆர். அச்சமயத்தில் காணப்பட்டாரே அது ஏன்? அப்போதெல்லாம் ‘இந்திராவே காம்ரேட் பி.ஆரைக் கூப்பிட்டு ஆலோசனை நடத்தி இருக்கார்” என்று மேற்கண்ட 2 கேள்விகளைக் கேட்ட காம்ரேடுகளிடம் தலைமை புளுகியதே அது ஏன்? அதற்கெல்லாம் ஒரே பதில்தான்.. உங்கள் தலைமையே எமெர்ஜென்சியின்போது தொண்டர்களுக்குத் துரோகம் செய்தது.. ஆதரவு தருவதற்கு தனக்கு ராஜ்யசபா சீட் வேண்டும் என்று தொண்டர்களின் தியாகத்தை பி.ஆர். பேரம் பேசினார். இப்போது எமெர்ஜென்சியை எதிர்த்த மாதிரி பம்மாத்து செய்கிறீர்கள்.
கட்டபொம்மன்.

மேற்கண்ட இந்தக் கேள்விக்கு உங்களை பதிலலிக்கச்சொல்லி பலமுறை நானும் பின்னூட்டமிட்டுவிட்டேன். இதுவரை நீங்கள் அந்த பின்னூட்டங்களை பதிப்பிக்காதது மட்டுமில்லாமல், பதிலும் சொல்லாதது உமது சந்தர்ப்பவாத போலித்தனத்தின் நிஜமுகத்தை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது.))))இப்படி பல ரிமைண்டர் நான் கொடுத்துவிட்டேன். அவற்றையெல்லாம் முறையாக பதிப்பிக்காவிட்டாலும்கூட பரவாயில்லை, கட்டபொம்மன் வைத்த இந்தக் கேள்விக்கு உமது பதில் எங்கே சந்திப்பு?